Tamil News
Home செய்திகள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் – சீனர்களுக்கு உணவு வழங்க மறுக்கும் கொழும்பு உணவு விடுதிகள்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் – சீனர்களுக்கு உணவு வழங்க மறுக்கும் கொழும்பு உணவு விடுதிகள்

கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் நிலையில் மற்ற நாடுகளில் உள்ள சீனர்களுக்கு உணவு வழங்கப்படுவது இல்லை என்ற புகார்கள் எழுந்துள்ளது.

சீனாவின் உஹான் மாகாணத்திலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் 20இற்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸால் சீனாவில் இதுவரை 213 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதனால் சீனாவிலிருந்து தங்கள் நாட்டு மக்களை மற்ற நாடுகள் விமானங்களை அனுப்பி அழைத்துச் செல்கின்றன. இந்நிலையில் இலங்கையில் சீனாவை சேர்ந்த ஒருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உலக நாடுகள் பலவற்றில் சீனர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொழும்பில் உள்ள உணவகங்கள் சிலவற்றில் சீனர்களுக்கு அனுமதியில்லை என்ற அறிவிப்புக்கள் ஒட்டப்பட்டுள்ளது.

இத்தகைய நடவடிக்கை பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாடுகளில் விடுதிகள் முதற்கொண்டு பொது மக்கள் நடமாடும் பகுதிகளில் சீனர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Exit mobile version