Tamil News
Home செய்திகள் கொரோனா மரணம் 30 ஆக உயர்வு – 23 வயதான இளைஞர் ஒருவர் பலி

கொரோனா மரணம் 30 ஆக உயர்வு – 23 வயதான இளைஞர் ஒருவர் பலி

கொரோனா வைரஸ் தொற்றால் கொழும்பு 15, மோதரையைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவர் நீரிழிவு நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதன் மூலம் 30 ஆக உயர்ந்துள்ளது.

Exit mobile version