கொரோனா தொற்று இல்லை என சான்று வைத்திருந்த இந்தோனேசியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா தொற்று இல்லை என சான்று வைத்திருந்த இந்தோனேசியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளிலிருந்து இந்தோனேசியாவுக்கு திரும்பிய சுமார் 1000 இந்தோனேசியர்கள் கொரோனா தொற்று இல்லை என சான்று வைத்திருந்த நிலையில், இந்தோனேசியாவுக்குள் நுழைந்த பின் அவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டதில் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டிருக்கிறது.
இந்தோனேசியாவின் கணக்குப்படி, கடந்த டிசம்பர் 28 முதல் இவ்வாறு 1,092 இந்தோனேசியர்களுக்கும் 122 வெளிநாட்டவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டிருக்கிறது.