முல்லைத்தீவு குருந்தூர் மலையில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தை ஒத்த உருவம் பல்லவர் கால எட்டுப்பட்டை (எட்டு முகம்) தாரா லிங்கம் என்பதை வரலாற்று ஆய்வாளர் NKS.திருச்செல்வம் உறுதிப்படுத்தியுள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவருடைய ட்விட்டர் பக்கத்தில், “முல்லைத்தீவு குருந்தூர் மலையில் நடைபெற்ற அகழ்வாய்ச்சியில் கிடைத்த தொல்லியல் சிதைவுகளில் காணப்படும் சிவலிங்கத்தை ஒத்த உருவம் பல்லவர் கால எட்டுப்பட்டை (எட்டு முகம்) தாரா லிங்கம் என்பதை வரலாற்று ஆய்வாளர் திரு.NKS திருச்செல்வம் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்” என பதிவிட்டுள்ளார்.
முல்லைத்தீவு குருந்தூர் மலையில் நடைபெற்ற அகழ்வாய்ச்சியில் கிடைத்த தொல்லியல் சிதைவுகளில் காணப்படும் சிவலிங்கத்தை ஒத்த உருவம் பல்லவர் கால எட்டுப்பட்டை ( எட்டு முகம்) தாரா லிங்கம் என்பதை வரலாற்று ஆய்வாளர் திரு.NKS திருச்செல்வம் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்.#KurunthurMalai pic.twitter.com/fvEu8on6sL
— Shritharan Sivagnanam (@ImShritharan) February 10, 2021
மேலும் பல்லவர் கால கட்டட வடிவமைப்புக்களின் சாட்சியாக இருக்கும் அஷ்ட தார லிங்கம். தமிழ் நாட்டின் கும்ப கோணத்தை சேர்ந்த கூந்தூர் முருகன் ஆலயம் மற்றும் ஈழத்தின் குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் கோவிலிலும் உள்ளதான அஷ்ட தார லிங்கம்.
குருந்தூர் – கூந்தூர் பெயர் கூட ஒத்ததாகவே இருக்கிறது என்றும் சிறிதரனின் ட்விட்டர் பதிவில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.