Home செய்திகள் கிளிநொச்சியில் அதிகாலை பயங்கரம்! கணவனால் மனைவி வெட்டிக்கொலை

கிளிநொச்சியில் அதிகாலை பயங்கரம்! கணவனால் மனைவி வெட்டிக்கொலை

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மயில்வாகனபுரம் கிராமத்தில் மனைவியை கணவன் வெட்டி கொலை செய்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மனைவியின் உறவினரான யுவதியொருவரை வெட்டிய பின் தானும் கழுத்தறுத்து தற்கொலை செய்ய முற்பட்டுள்ளார்.

இன்று ( சனிக்கிழமை) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
25 1 கிளிநொச்சியில் அதிகாலை பயங்கரம்! கணவனால் மனைவி வெட்டிக்கொலை


இச் சம்பவத்தின் போது சுகந்தன் சகுந்தலா(வயது 25) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு அவரின் உறவினரான அண்மையில் அரச நியமனம் பெற்ற பட்டதாரி யுவதி காயமடைந்துள்ளார். அத்தோடு குறித்த நபர் தன்னைத் தானே கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில் அவரும் யுவதியும் கிளிநொச்சி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்ந்து வாழ்ந்த வந்த நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணைகளை தர்மபுரம் காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

Exit mobile version