Home செய்திகள் காரைக்கவியின் பத்து நூல்களின் அறிமுக விழா

காரைக்கவியின் பத்து நூல்களின் அறிமுக விழா

காரைக்கவியின் பத்து நூல்களின் அறிமுக விழா இன்று காலை வவுனியா தேசிய கல்வியற்கல்லூரியில் இடம்பெற்றது.

கல்வி அமைச்சின் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை தேசிய வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் காரைக்கவி கந்தையா பத்மாநந்தனின் பத்து நூல்களின் அறிமுக விழா இன்று வவுனியா தேசிய கல்வியற்கல்லூரியில் இடம்பெற்றது.

இதன் போது கலைநிகழ்வுகள் இடம்பெற்றிருந்ததோடு, இந்நூல்களின் அறிமுக உரையினை வவுனியா தேசிய கல்வியற்கல்லூரியின் உபபீடாதிபதி பொ.சத்தியநாதனால் நிகழ்த்ததப்பட்டதோடு, நூல்களின் நயவுரைகளை கலாநிதி தமிழ்மணி அகளங்கன், தேசிய கல்வியற் கல்லூரி விரிவுரையாளர் திருமதி நேலோமி அன்ரனி குரூஸ், தேசிய கல்வியற் கல்லூரி விரிவுரையாளர் ச.பவானந்தன் ஆகியோரால் நிகழ்தப்பட்டதுடன், ஏற்புரையினை நூலாசிரியர் காரைக்கவி கந்தையா பத்மானந்தால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
DSC09355 காரைக்கவியின் பத்து நூல்களின் அறிமுக விழா

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி தி.ஜெயகாண்டீபன் தலைமையில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசிய கல்வியற் கல்லூரி முன்னாள் பீடாதிபதி க.சுவர்ணராஜா, ஒளிரும் வாழ்வு அமைப்பின் தலைவர் ஜெகநாதன் சுதாநாதன், கிளிநொச்சி தமிழ் சங்கத்தின் பெருந்தலைவர் வே.இறைபிள்ளை மற்றும் கல்வியளாளர்கள், கலைஞர்கள் எனபலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Exit mobile version