‘காணிகள்’ வர்த்தமானியை மீளப்பெறுவதே ஒரே தீர்வு – நன்றி – ஆர்.ராம் ஆசிரியர் வீரகேசரி

வடக்­கிலும், கிழக்­கிலும், அரச படைகள், பௌத்த தேரர்கள் மற்றும் கட்­ட­மைப்­புக்கள், வன பாது­காப்பு திணைக்­களம், வன ஜீவ­ரா­சிகள் திணைக்­களம், தொல்­பொ­ரு­ளியல் திணைக்­களம், மகா­வலி அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை உள்­ளிட்ட அரச நிறு­வனக் கட்­ட­மைப்­புக்கள் ஏட்­டிக்குப் போட்­டி­யாக காணி­களை கப­ளீ­கரம் செய்து வரு­கின்­றமை தொடர்­க­தை­யா­கவே இருக்­கின்­றன.
அவ்­வா­றான நிலையில் வெளி­யி­டப்­பட்­டுள்ள ‘காணி நிர்­ணயக் கட்­டளைச் சட்­டத்தின் 4ஆம் பிரி­வுக்கு அமை­வாக மார்ச் 28ஆம் திக­தி­யி­லி­ருந்து மூன்று மாதங்­க­ளுக்குள் பட்­டி­ய­லி­டப்­பட்­டுள்ள காணிகள் குறித்த உரித்­துக்கள் உறுதி செய்­யப்­ப­டா­த­வி­டத்து கட்­ட­ளைச்­சட்­டத்தின் (5)1இற்கு அமை­வாக அரச காணி­க­ளாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்டு அவை­பற்றி நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும்’ என்ற வர்த்­த­மா­னியில் அடை­யாளம் காணப்­பட்­டுள்ள காணி­களை உற்று நோக்­கு­கின்­ற­போது தற்­போ­தைய அர­சாங்­கத்தின் சூட்­சு­ம­மான மற்­றொரு நோக்­கத்­தையும் இல­கு­வாக அடை­யாளம் கண்­டு­கொள்ள முடியும். அந்த நோக்கம் தமிழ் மக்­களின் இருப்­பையும், வாழ்­வா­தா­ரத்­தையும் சிதைக்கும் அதி­ப­யங்­க­ர­மா­னதும் கூட.
வர்த்­த­மானி அறி­வித்­தலின் பிர­காரம், முல்­லைத்­தீவின் கரைத்­து­றைப்­பற்று பிர­தேச செய­லாளர் பிரிவில் உள்ள அம்­ப­லவன் பொக்­கனை, முள்­ளி­வாய்க்கால் கிழக்கு மற்றும் மேற்கு, கிரா­ம­சேவர் பிரி­வு­களும், கிளி­நொச்சி மாவட்­டத்தின் பச்­சி­லைப்­பள்­ளியில் உள்ள கரை­யோர கிரா­மங்கள், யாழ்ப்­பாணம் மரு­தங்­கே­ணியில் உள்ள கரை­யோரக் கிரா­மங்கள் மற்றும் மன்னார் முசலி பிர­தேச செய­லாளர் பிரிவில் உள்ள அரு­வி­யாற்றின் ஒரு­ப­கு­தியைச் சேர்ந்த கிரா­மங்கள் அடை­யா­ள­மி­டப்­பட்­டுள்­ளமை அனை­வரும் அறிந்­தி­ருக்கும் விடயம்.
முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட பகு­திகள் போரின் கோரத்­துக்கு உள்­ளா­னவை. அங்கு மக்கள் தொகை குறைவு. மீள்­கு­டி­யேறி இருப்­ப­வர்கள் கூட உரிய ஆவ­ணங்­களை வைத்­தி­ருப்­பார்­களா என்­பது சந்­தேகம் தான். இத­னை­வி­டவும் மேற்­படி பகு­தி­களில் வாழ்ந்­த­வர்கள் புலம்­பெ­யர்ந்தும் இருக்­கின்­றார்கள். அவர்கள் அடுத்த மூன்று மாதங்­க­ளுக்குள் தங்­களின் காணி உரித்தை உறு­திப்­ப­டுத்­து­வது என்­பது காணல் நீரான விடயம்.
ஆகவே, அடை­யா­ள­மி­டப்­பட்ட காணி­களை நிச்­சயம் கைய­கப்­ப­டுத்த முடியும் என்ற பெரு நம்­பிக்கை அர­சாங்­கத்­துக்கு நன்­றா­கவே உள்­ளது என்­பதை முதலில் புரிந்து கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.
அவ்­வா­றான நிலையில் அர­சாங்­கத்தின் சூட்­சு­மத்­திட்­டத்தை முல்­லைத்­தீவு மாவட்­டத்தின் கரைத்­து­ரைப்­பற்று பிர­தேச செய­லாளர் பிரி­வி­லி­ருந்து ஒவ்­வொன்­றாக நோக்­கினால் அடை­யாளம் காண்­ப­தற்கு இல­கு­வாக இய­லு­மா­ன­தாக இருக்கும்.
கரைத்­து­ரைப்­பற்று பிர­தேச செய­லாளர் பிரிவில் 72கிலோ­மீற்றர் நீள­மான ஆழ்­க­டலை அடி­யொற்­றிய கடற்­கரை நிலங்கள் காணப்­ப­டு­கின்­றன. அம்­ப­ல­வன்­பொக்­கனை கிராம சேவகர் பிரிவின் சாலை கிரா­மத்­தி­லி­ருந்து வட்­டு­வாகல் வரையில் 21 கிலோ­மீற்­றர்­களும், வட்­டு­வா­கலில் இருந்து கொக்­குத்­தொ­டுவாய் வரையில் 51 கிலோ­மீற்­றர்­களும் உள்­ளன.
இதற்குள் அம்­ப­லவன் பொக்­கனை, சாலை, புது­மாத்­தளன், வலை­ஞர்­மடம், கரை­யா­முள்­ளி­வாய்க்கால், வெள்­ள­முள்­ளி­வாய்க்கால் உள்­ளிட்ட கரை­யோரக் கிரா­மங்­களும் உள்­ள­டக்­கு­கின்­றன. ஏற்­கெ­னவே 2007ஆம் ஆண்டு வெளி­யான மகா­வலி அபி­வி­ருத்தி அதி­கா­ர­ச­பையின் விசேட வர்த்­த­மானி அறி­வித்­தலின் பிர­காரம் கொக்­கு­கிளாய் முதல் வட்­டு­வாகல் வரை­யி­லான பகுதி நீட்­டிக்­கப்­பட்ட ‘மகா­வலி எல்’ வல­யத்­துக்குள் வலிந்து உட்­பு­குத்­தப்­பட்­டுள்­ளது.
அவ்­வாறு இருக்­கையில் எஞ்­சி­யி­ருக்­கின்ற ஆழ்­க­டலை மையப்­ப­டுத்­திய கடற்­கரை காணி­களை கைய­கப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே தற்­போது வெளி­யி­டப்­பட்­டுள்ள வர்த்­த­மானி அறி­வித்தல் ஊடாக நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளது. இந்த வர்த்­த­மானி அறி­வித்தல் நடை­மு­றை­யா­கின்­ற­போது,  முல்­லைத்­தீவு மாவட்­டத்தின் கரைத்­து­றைப்­பற்று பிர­தேச செய­லாளர் பிரிவில் காணப்­ப­டு­கின்ற 72 கிலோ­மீற்றர் நீள­மான ஆழ்­கடல் கடற்­ப­ரப்பைக் கொண்ட நிலங்கள் மத்­திய அர­சாங்­கத்தின் கட்­டுப்­பாட்­டுக்குள் நேர­டி­யாகச் சென்­று­விடும்.
அடுத்­த­தாக, தமிழ் மக்­களின் தாயகக் கோட்­பாட்டை வர­லாறு நெடு­கிலும் அடை­ய­வி­டாது தடுப்­ப­தற்­கா­கவே கொக்­குத்­தொ­டு­வாயில் கடற்­க­ரை­யோ­ர­மாக 213 தென்­னி­லங்­கையைச் சேர்ந்த பெரும்­பான்மை சிங்­கள குடும்­பங்கள் குடி­யேற்­றப்­பட்டு முல்­லைக்­க­டலில் சட்­ட­வி­ரோத மீன்­பிடி முறை­மைகள் உட்­பட ‘தாரா­ள­மாக’ கடற்­றொ­ழிலில் ஈடு­ப­டு­வ­தற்­கான வச­திகள் செய்து கொடுக்­கப்­பட்­டுள்­ளன. கடற்­ப­டையும் அதற்­கான ‘முழு­மை­யான ஒத்­து­ழைப்பை’ வழங்­கி­வ­ரு­கின்­றது.
அப்­ப­டி­யி­ருக்­கையில், எஞ்­சிய ஆழ்­க­டலை மையப்­ப­டுத்­திய கடற்­கரைக் கிரா­மங்­களின் நிலங்­களை அர­சு­ட­மை­யாக்­கு­வதன் மூல­மாக மேலும் திட்­ட­மிட்ட தென்­னி­லங்கை சிங்­களக் குடி­யேற்­றங்­களை மேற்­கொள்­வ­தற்­கான ஏது­நி­லை­மை­களை இல­கு­வாக உரு­வாக்க முடியும். அத்­தோடு தமி­ழர்­களின் தாயகக் கோட்­பாட்டை மட்­டு­மல்ல முல்­லைத்­தீவின் குடிப்­ப­ரம்­ப­லையும் மாற்­றி­ய­மைக்க முடியும். அதனை தற்­போ­தைய அர­சாங்­கமும் விரும்­பு­கின்­றது என்­ப­தற்கு வன்னி மாவட்­டத்­துக்கு பொறுப்­பாக இருக்கும் அமைச்சர் பிமல் ரத்­நா­யக்­கவின் தேர்­தல்­காலச் செயற்­பா­டுகள் சான்­று­ரைக்­கின்­றன.
முல்­லைத்­தீவின் கொக்­குத்­தொ­டு­வாயில் இருந்து கிளி­நொச்­சியின் பச்­சி­லைப்­பள்ளி, யாழ்ப்­பா­ணத்தின் மரு­தங்­கேணி வரையில் அடை­யா­ள­மி­டப்­பட்ட கரை­யோரக் காணிகள் கைய­கப்­ப­டுத்­தப்­பட்டால் ‘வட­பி­ராந்­தி­யத்தின் கிழக்கு கடற்­ப­குதி’ அர­சாங்­கத்தின் பூர­ண­மான கட்­டுப்­பாட்­டுக்குள் சென்­று­விடும்.
குறித்த பகு­திக்குள் ஆயி­ரக்­க­ணக்­கான குடும்­பங்­களின் வாழ்­வா­த­ரத்தை பேணும் கடல்­வளம் கொழிக்கும் கடற்­ப­ரப்பைத் தாண்டி ‘கனிம வளங்கள்’ நிறைந்த கடற்­க­ரை­யோ­ரங்­களும் உள்­ளன என்­ப­தையும் கவ­னத்தில் கொள்ள வேண்­டி­யுள்­ளது.
இத­னை­வி­டவும்,‘திரு­கோ­ண­ம­லை கொக்கிளாய்-கொக்­குத்­தொ­டு­வாய்-முல்­லைத்
தீ­வு-முள்­ளி­வாய்க்­கால்-அம்­ப­லன்­பொக்­க­னை- சா­லை-சுண்­டிக்­கு­ளம்-ம­ரு­தங்­கேணி-ப­ருத்­தித் துறை’ வரையில் கடற்­க­ரையை அண்­மித்­ததாக தரை­வழி வீதி­யொன்றை அமைப்­ப­தற்­கான திட்டம் வீதி அபி­வி­ருத்தி திணைக்­க­ளத்­திடம் உள்­ளது.
பருத்­தித்­து­றையில் இருந்து திரு­கோ­ண­மலை வரை­யி­லான இந்த வீதி­ய­மைப்பு திட்டம் தற்­போது கிடப்பில் இருந்­தாலும் போரின் பின்­ன­ரான சூழலில் கொக்­குத்­தொ­டு­வா­யி­லி­ருந்து புல்­மோட்­டைக்கு பாலம் அமைக்கும் திட்­டத்­துக்கு சமாந்­த­ர­மாக ‘இந்­திய’ தரப்­புக்­களால் ஒரு­சில சந்­தர்ப்­பங்­களில் விருப்­புடன் சீர்­தூக்கிப் பார்க்­கப்­பட்­டது. கள­வி­ஜ­யங்­களும் நடத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன.
அப்­ப­டி­யி­ருக்­கையில், தமிழ் மக்­களின் தாயகக் கோட்­பாட்­டுக்கும், இலங்கை, ஒப்­பந்­தத்தின் பிர­காரம் இணைந்த வடகிழக்­குக்கும் முழு­மை­யான எதிர்­நி­லைப்­பாட்டில் உள்ள ஜே.வி.பி. தலை­மை­யி­லான அர­சாங்கம் ஆட்­சியில் அமர்ந்­தி­ருக்­கி­றது. ஆகவே தான் பருத்­தித்­துறை, திரு­கோ­ண­மலை கரை­யோர வீதித் திட்­டத்­தினை அடை­யா­ள­மின்றி சிதைப்­ப­தற்கு ‘காணி’ சுவீ­க­ரிப்பு நட­வ­டிக்­கையை திட்­ட­மிட்டு முன்­னெ­டுக்­கின்­றது என்­பதில் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்கு ஒன்­று­மில்லை.
அதே­நேரம் மன்­னாரில் அரு­வி­யா­றுக்கு அண்­மித்த பகுதி அடை­யா­ள­மி­டப்­பட்­டுள்­ளது. அது ‘கீழ் மல்­வத்து ஓயா’ திட்­டத்தின் அங்­கத்­துக்குள் வரு­கின்ற நிலப்­ப­ரப்­பாகும். ஆகவே, மல்­வத்து ஓயா திட்­டத்­தினை தடை­யின்றி முன்­னெ­டுப்­ப­தற்கு முன்­னேற்­பா­டா­கவே அண்­மித்த பகு­தி­களில் உள்ள காணி­களை கைய­கப்­ப­டுத்தும் செயற்­பாட்டை பார்க்க வேண்­டி­யுள்­ளது.
அநுர அர­சாங்கம் உட்­பட சிங்­கள தேசி­யத்தின் மேற்­படி பல்­நோக்கு இலக்­கு­களைக் கொண்ட வர்த்­த­மானி மீளப்­பெ­றப்­பட்டால் மட்­டுமே தமிழ் மக்­க­ளி­னதும், தமிழ்த் தேசத்­தி­னதும் இருப்பு உறுதி செய்­யப்­படும்.
ஆகவே, வர்த்­த­மானி விட­யத்தில் தமிழ் மக்­களின் பிர­தி­நி­தி­களும் சரி, சிவில் அமைப்­புக்­களும் சரி, தமிழ் மக்­களும் சரி, நெகிழ்ச்சித் தன்­மையை காண்­பிக்­கவே முடி­யாது.  அநுர அர­சாங்­கத்­தினைப் பொறுத்­த­வ­ரையில் வர்த்­த­மா­னியை மீளப்­பெ­று­வதில் எள்­ள­ளவும் ஆர்­வ­மில்லை.
விசே­ட­மாக, அரச அதி­கா­ரி­க­ளுக்கு இந்த வர்த்­த­மா­னியை மீளப்­பெ­று­வதில் சிறி­த­ள­வேனும் உடன்­பா­டில்லை. பிர­தமர் ஹரிணி அம­ர­சூ­ரிய தலை­மை­யி­லான அர­சாங்க குழு­வி­ன­ருக்கும் வடக்கு,கிழக்கு பிர­தி­நி­தி­க­ளுக்கும் இடை­யி­லான சந்­திப்பு அதற்­கொரு சான்­றா­தாரம். அதன் பின்னர்  பிர­த­ம­ருடன் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­டலை அடிப்­ப­டை­யாக வைத்து வர்த்­த­மா­னியை மீளப்­பெ­று­வ­தற்­கான சட்ட ஆலோ­ச­னையை காணி அமைச்சின் செய­லாளர், சட்ட மா அதி­ப­ரிடம் கோரி­யி­ருக்­கின்றார்.
அரசியல் ரீதியாக தீர்மானம் எடுக்கப்பட் டால் வர்த்தமானியை மீளப்பெறுவதொன்றும் பெரிய விடயமல்ல. அதற்கு சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெறவேண்டிய அவசியமும் இல்லை.
இங்கே சட்ட மா அதிபரின் ஆலோசனை யைப் பெற முனைவதன் நோக்கம் ஒன்று காலத்தைக் கடத்துவது, இரண்டாவது வர்த்தமானி அறிவித்தல் சட்டவிதிகளுக்கு உட்பட்டது என் பதை சட்ட மா அதிபர் ஊடாக வெளிப்படுத்தி மீளப்பெறுவதை தவிர்ப்பது.
அரசாங்கத்தின் குறித்த எளிய நகர்வினைக் கூடக் கணிக்க முடியாத அளவுக்கு தமிழ் மக்களின் சட்டம் தெரிந்த தலைவர்களான சுமந்திரனும், கஜேந்திரகுமாரும் ஏட்டிக்குப்போட்டியாக வர்த்தமானி மீளப்பெறப்பட்டுவிட்டது என்ற தொனி யில் அதற்கு தாமே காரணம் என்றுரைத்து ஊடக சந்திப்புக்களை நடத்தி உரிமைகோரவே விளைந் திருக்கின்றார்கள்.
வெளியாகியிருக்கின்ற வர்த்தமானி நடை முறைக்கு வருவதற்கு இன்றிலிருந்து இன்னும் 14 நாட்கள் (28–06–2025) தான் இருக்கின்றன. இந்த விடயம் சட்ட ரீதியாக அல்ல, அரசியல் ரீதியாக, தமிழ்த் தேசமாக ஒருங்கிணைந்து அணுகப்பட வேண்டியது. தவறினால் தலையெழுத்தே மாறி விடும், தமிழ் மக்களினது மட்டுமல்ல… அரசியல், சிவில் தலைவர்களினதும் கூட.
முற்றும்.