Home செய்திகள் காட்டு யானைகளால் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகும் தமிழ் கிராமங்கள் கண்டுகொள்ளாத அரசும், தமிழ் அரசியல்வாதிகளும்

காட்டு யானைகளால் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகும் தமிழ் கிராமங்கள் கண்டுகொள்ளாத அரசும், தமிழ் அரசியல்வாதிகளும்

மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பெருநிலப்பகுதியில் அமைந்துள்ள போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி இளைஞர் விவசாயத்திட்டம் எனும் கிராமத்தில் வெள்ளிக்கிழமை (01) அதிகாலை புகுந்த காட்டுயானை அக்கிராமத்திலிருந்த எனது தென்னம் தோட்டம் ஒன்றை முன்றாக அழித்து விட்டுச் சென்றுள்ளதாக ஊடகவியலாளர் வ.சகத்திவேல் தெரிவித்தார்.

அதிகாலை ஒரு மணியளவில் புகுந்த காட்டுயானை சுமார் 40 வருடங்களாக இருந்து பயன்கொடுத்து வந்த தென்னைகளை முற்றாக அழித்துள்ளதுடன், மாமரங்களையும் உடைத்துச் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளது.

வெளியில் ஏதோ சத்தம் கேட்கின்றது என்பதை அவதானித்த எனது குடும்பஸ்த்தினர் காட்டுயானை தமது தென்னைகளை உடைத்து அழிப்பதை அதவானித்துள்ளனர். பின்னர் கிராம மக்கள் அயலிலுள்ளவர்கள், அனைவரும் ஒன்றுகூடி பலத்த சத்தமிட்டும், பட்டாசு கொழுத்தியும், யானை அசையவில்லை, பின்னர் அதிகாலை 3 மணியளவில் யானையை ஒருவாறு தீப்பந்தம் ஏந்தியும், பலத்த பிரயத்தனத்தின் மத்தியில் வெளியேற்றினோம்.

இச்சம்பவம் தமக்கு பாரிய மனஅழுத்தத்தைத் தந்துள்ளதோடு, தாம் சுமார் 40 வருடங்களாக பேணிப் பாதுகாத்து வந்த பயன்தரும் தென்னைகள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளமை பாரிய நட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஒவ்வாரு இரவுப் பொழுதையும் தாம் காட்டு யானைகளுக்குப் பயந்து அச்சத்துடன் கழித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பகுதியின் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் யத்தம் நிறைவடைந்த பின்னர் தொடர்ந்து இவ்வாறு காட்டு யானைகளின் தாக்குகதல்களும், அட்டகாசங்களும் அதிகாரித்து வருகின்றன. அரசாங்க அதிகாரிகளும். அரசியல்வாதிகளும், இவற்றைக் கட்டுப்படுத்த பல்வேறுபட்ட பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்ற போதிலும். அது இற்றைவரை அப்பகுதி மக்களுக்கு ஒரு எட்டாக்கனியாகவே அமைந்துள்ளது. மேலும் இதற்குரிய நிரந்தரத் தீர்வின்றி அப்பகுதி மக்கள் வாழ்ந்து வருவதாக ஊடகவியலாளர் வ.சக்திவேல் மேலும் தெரிவித்தார்.

காட்டு யானைகளின் தொடர் தாக்குதலுக்கு வடக்கிலும், கிழக்கிலும் பல தமிழ் கிராமங்கள் உட்பட்டுவருகின்ற போதும் சிறீலங்கா அரசும் அதற்கு ஆதரவுகளை வழங்கும் தமிழ்க் கட்சிகளும் அதனை கண்டுகொள்வதில்லை என தமிழ் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

battielephant2 காட்டு யானைகளால் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகும் தமிழ் கிராமங்கள் கண்டுகொள்ளாத அரசும், தமிழ் அரசியல்வாதிகளும்சில வருடங்களுக்கு முன்னர் சிங்களப் பகுதிகளில் உள்ள காடுகளில் இருந்து சிங்களக் கிராமங்களுக்குள் புகுந்து தாக்குதல்களை மேற்கொண்ட காட்டு யானைகளை சிறீலங்கா அரச அதிகாரிகளும், படையினரும் பொறிவைத்து பிடித்து வன்னி காடுகளுக்குள் கொண்டுவந்து விட்டுச் சென்றதும் நாம் அறிந்தவையே.

Exit mobile version