காசா மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் தடைகள் மரணங்களை தோற்றுவிக்கும் – ஐ.நா

மக்களுக்குத் தேவையான உணவு, நீர் மற்றும் மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட் கள் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தடைகள் அங்குள்ள மக்களுக்கு மரணங்களை ஏற்படுத்த லாம் என ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான மற்றும் உதவி நிறு வனம் எச்சரித்துள்ளது.
போர் ஆரம்பமாகியதில் இருந்து கடந்த 18 மாதங்களாக காசா பகுதி மிக மோசமாக மனிதா பிமான நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது. அங்குள்ள மக்கள் வீடுகளை இழந்து தற்காலிக தங்கு மிடங்களில் வாழும்போதும் அவை யும் குண்டு வீசித் தாக்கப்படுவதால் பெருமளவான மக்கள் கொல்லப் பட்டு வருகின்றனர்.
படை நடைவடிக்கைகளினாலும்,கடந்த 50 நாட்களாக நிவாரணப் பொருட்கள் செல் லும் பாதைகளை இஸ்ரேல் மூடியுள்ளதாலும் அங்கு மிகப்பெரும் மனித அவலம் ஏற் பட்டுள்ளது. தொண்டு நிறுவனப் பணியாளர்
களையும் இஸ்ரேல் படுகொலை செய்து வருகின்றது என அது மேலும் தெரிவித்துள்ளது.
இதனிடையே,  போரினால் பாதிக்கப் பட்டுள்ள காசா மற்றும் மேற்கு கரை பகுதியில் செயற்படுவதற்கு ஐ.நாவின் அமைப்புக்கள், தொண்டுநிறுவனங்கள் மற்றும் நடுநிலைமை வகிக்கும் நாடுகளை இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என்ற விவாதம் ஐ.நாவின் அனைத் துலக நீதிமன்றத்தினால் அடுத்தவாரம் நெதர்லாந்
தில் உள்ள அனைத்துலக நீதிமன்றத்தில் விவாதிக் கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான சட்ட ஆலோசனைகளை தமக்கு வழங்குமாறு ஐக்கிய நாடுகள் சபை அனைத்துலக நீதிமன்றத்திடம் கோரிக்கையை விடுத்துள்ளது.
45 இற்கு மேற்பட்ட நாடுகளும் பல தொண்டு நிறுவன அமைப்புக்களும் தமது கோரிக்கைகளை ஐ.நாவின் நீதிமன்றத்தில் சமர்ப் பித்துள்ளன. அதன் விசாரணைகள் எதிர் வரும் 28 ஆம் நாள் இடம்பெறவுள்ளது.