Home செய்திகள் கதிர்காமத்தில் நடப்பதென்ன – இஸ்லாமிய அரபுக் கொடி பறக்கின்றது

கதிர்காமத்தில் நடப்பதென்ன – இஸ்லாமிய அரபுக் கொடி பறக்கின்றது

கதிர்காமத்தில் பாரம்பரியமாக ஏற்றப்படும் முருகனின் செம்மஞ்சள் நிற சேவல் கொடிக்குப் பதிலாக இஸ்லாமிய பச்சை நிற அரபுக் கொடி ஏற்றப்படுவதாக பக்தர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். குறித்த நடைமுறை எவ்வாறு தோன்றியது. பாரம்பரிய சைவ சம்பிரதாயத்தை மாற்றியது யார் என பலரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.

நேற்று கொடியேற்ற நிகழ்வு இடம்பெற்ற போது, அங்குள்ள இஸ்லாமியப் பள்ளிவாசலிலேயே கொடி ஏற்றப்பட்டது. அதுவும் அரபு எழுத்துக்களால் ஆன பச்சை நிறக் கொடியே ஏற்றப்படுகின்றது.

கதிர்காம வரலாறுகளின்படி முருகன் கோவிலில் முருகனின் சேவல் கொடி ஏற்றப்பட்டு, அங்கிருந்து தெய்வானை அம்மன் கோவிலுக்கு கொடி எடுத்து வரப்பட்டு, கொடி புஜை வழிபாடுகள் நடத்தப்பட்ட பின் பக்கீர் மடத்திற்கு (இப்போதைய பள்ளிவாசலின் முன்பக்கம்)  கொண்டு வரப்பட்டு அங்குள்ள கொடிக் கம்பத்தில் கட்டப்படும்.

Kathiskamam 2 கதிர்காமத்தில் நடப்பதென்ன - இஸ்லாமிய அரபுக் கொடி பறக்கின்றதுஇந்த முறை இப்போது மாற்றப்பட்டு, முஸ்லிம்களின் அரபு எழுத்தினாலான கொடி ஏற்றப்படுவதை கவனத்தில் கொள்வதுடன், இதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, மீண்டும் சேவல் கொடி ஏற்றுவதற்கு உரியவர்கள் கவனம் எடுக்க வேண்டும் என பக்தர்கள் உரியவர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர். கோவில் நிர்வாகத்தினர் இதனை கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Exit mobile version