கடற்படையால் காணி அபகரிப்பு – மனித உரிமை ஆணைக்குழுவில் மக்கள் முறைப்பாடு !

கடற்படை கையகப்படுத்தியுள்ள தமக்குச் சொந்தமான 15 ஏக்கர் காணியை மீட்டுத்தரக் கோரி அக்காணி உரிமையாளர்களினால் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேலணை பிரதேச செயலர் பிரிவுட்குட்பட்ட ஜே11 மண்கும்பான் 5ம் வட்டாரத்தில், கடந்த 30 வருடகாலமாக தனியாருக்குச் சொந்தமான15 ஏக்கர் காணியில் தீவகத்திற்கான கடற்படையின் பிரதான முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த காணியினை சுவிகரிப்பதற்குரிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்  காணி உரிமையாளர்கள் தமது காணியினை பெற்றுத் தருமாறு கோரி யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளனர்.