ஒரு கூட்டுறவாளனின் இழப்பு – இ. ராஜன்

13/4/2025 ஞாயிற்றுக்கிழமை  அதிகாலை  அலைபேசி நித்திரையால் எழுப்புகிறது. மறுமுனையிலிருந்து மாமா அப்பா போய் விட்டார் என்று அழுகுரலில் லண்டனில் வசிக்கும் செல்ல மகள் பாரதி கூறிவிட்டு  விடை பெற்றாள். 1984 இல் சுன்னாகம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைமைக் கணக்களரான மகாதேவா அண்ணையை ஏழாலை மேற்கு முத்தமிழ்க் கலாமன்ற சன சமூக நிலையத்தில் சந்தித்தேன். அன்றைய சந்திப்பு  தான் பின் னாளில் மகாதேவா அண்ணை, மயூரண்ணை ஆக பெயர் மாற்றத்துடன் இன்று வரை அவரை வலம் வர வைத்தது.
மயூரண்ணா  தனது இளம் வயதிலிருந்தே  ஒரு கூட்டுறவாளனாக, தனது கிராமத்திற்காகவும், தமிழ் தேசியத்திற்காகவும், நாட்டிற்காகவும் உழைத்துக்கொண்டே இருந்தார். இயல், இசை, நாடகம் வளர்ப்பது, நடிப்பது என்று தன்னை ஒரு கலைஞன் ஆகவும் வெளிப்படுத்தினார். வீட்டிற்கு குடும்பத் தலைவனாகவும், கிராமத்திற்கு தொண்ட னாகவும், ஊருக்கு உழைப்பாளியாகவும், தேசத்திற்கு பொறுப்புள்ள கூட்டுறவு பொறுப்பாளராகவும் வாழ்ந்தவர் எங்கள் மயூரண்ணா.
கஜன்,சுதன் (சுன்னாகம் பொறுப்பாளர்) நிரஞ் சன்,ஈசன் 1987 ற்கு முன் பொறுப்பாக இருந்த காலம். இணக்கமன்று, மக்கள் கடை, காவல்கடமை என்று பல்வேறு கடமைகளிலும் மகாதேவா அண்ணையின் பங்கு அளப்பரியது. 1987 ற்கு முன் அனைத்து பிரிவுகளாயினும் சரி, சண்டையாயினும் சரி , சாப்பாடாயினும் அரசியல் வேலை செய்பவர்களின் கடமையா கவே இருந்தது. ஆயிரம் பேருக்கு உட்பட்ட போராளிகளுடன்  தேசியத்தலைவரின்  தளபதி கிட்டண்ணா  இராணுவ தளபதியாகவும், தியாகி தீலிபன் அரசியல் பொறுப்பாளராகவும் யாழ் குடாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த காலம் எல்லா பிரதேசங்களிலும் மகாதேவா அண்ணை போல பல பேரின் பலத்துடன் தான் அனைத்து கடமைகளும் நிறைவேற்றப்பட்டன.
நாங்கள் இந்திய அமைதிப்படை வந்து வனவாசம் சென்று போராடி திரும்ப  யாழ் நோக்கி வந்து எமது நிர்வாகங்களை  தேசியத்தலைவர், தளபதிகள் வழிகாட்டலில் ஒழுங்கமைத்து  நடத்தும் காலத்தில் தான் யாழ் குடா நாட்டின் அன்றைய தளபதி பானு  அவர்களால்  எனக்கு சொல் லப்பட்டது. எங்கள் பெடியள்  அரச திணைக்களங்களில் சென்று  ஒரே நேரத்தில் பல பேர் சில தேவைகளிற்கு உதவிகள் கேட்கிறார்கள். இதனை கட்டுப்படுத்த இருதரப்பும் பாதிக்கப்படாது  ஒழுங்குபடுத்து என்று அறிவுறுத்துகின்றார். யாழ் நாவலர் வீதியிலிருந்த செயலகத்திலிருந்து விடை பெற்று எனது பலாலி கோண்டாவில் சந்தி செயலகத்திற்கு வருகின்றேன்  மகாதேவா அண்ணா என்னை சந்திப்பதற் காக  இருக்கின்றார். அவரை  வனவாசத்திற்கு பின் முதன் முதல் கண்ட மனமகிழ்ச்சி ஒரு புறம்  பானு அண்ணா சொன்ன பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் எனக்கும் ஒரு வழி பிறந்தது  என்று இரட்டிப்பு மகிழ்ச்சி.
முப்படையும், மக்களுக்கான ஒழுங்கமைக்கப்பட்ட நிர்வாகமும் முப்பது வருடம் நடாத்தப்பட்டது என்றும் ஒரு நிழல் அரசு செயற்பட்டது என்றும் உலகம் இன்று வரை விடுதலைப்புலிகள் அமைப்பை உதாரணம் காட்டுவதற்கு  மக்களுக்காகவே, மக்களால் கட்டியமைக்கப்பட்ட  தமிழீழ நிர்வாக சேவை( செயலகம்) கரு மகாதேவா அண்ணரின் அன்றைய  சந்திப்பில் தான் உருவாகி நடைமுறைக்கு வரு கிறது. அதாவது  தளபதி பானு அண்ணா  கூறிய பிரச்சனையை  தீர்ப்பதற்கு திணைக்களங்களிலிருந்தும் எம்மோடு சேரந்து வேலை செய்யக்கூடிய ஒருவரை எங்கள் கோண்டாவில் செயலகத்தில்  பணிசெய்யுமாறும் எமது உறுப்பினர்கள் திணைக்களிற்கு செல்லாமல்  எங்கள் செயலகத்திற்கு வந்து அந்தந்த பிரதிநிதிகளிடம் தேவைகளை பூர்த்தி செய்யலாம் என்ற சிந்தனை தோன்றியது. இந்த சிந்தனை தோன்றுவதற்கு மகாதேவா அண்ணையின் சந்திப்பு தான் மூலகாரணமாக இருந்தது. இந்தக்  கருத்தை மகாதேவா அண்ணையிடம் சொன்னபோது உடனேயே நல்ல விடயம்  நான் வேலை செய்ய தயார் நீங்கள் இயக்குனர் சபையுடன் வந்து கதைத்து என்னை விடுவித்து  ஆரம்பியுங்கள் என்று ஆலோசனையும் தந்தார் . இந்த வேளையில் அன்றைய இயக்குனர் சபையின் தலைவராகவிருந்த குமாரவேல் அவர்களிடம் கதைத்த போது விடுவித்து உதவினார்.
தளபதி பானு அண்ணாவிற்கு இந்த ஒழுங்கு படுத்தல் முறையை தெரியப்படுத்தியபோது  அப்பாடா அப்ப இனி பெடியள் ஒருவரையும் திணைக்களத்திற்கு செல்லக்கூடாது  கோண்டாவில் அரசியல் செயலகத்திற்கு செல்லுங்கள் என்று அறிவுறுத்தலாம் என்று சந்தோசப்பட்டார். யாழ் குடாவில் உள்ள அனைத்து அரசதிணைக்களங்களிலிருந்தும்  ஒவ்வொருவர் விடுவித்து கோண்டாவில் செயலகத்தில் பணிக்கு அமர்த்திய முதலாவது  நபர் திரு . மகாதேவா அண்ணா. இந்த நிர்வாக சேவை ஆரம்பிக்கப்பட்டு கோண்டாவிலில் செயலகம் திறக்கப்பட்போது வைக்கப்பட்ட பெயர் “ மாதிரி செயலகம்” அதன் முதலாவது யாழ்மாவட்டத்திற்கு  அனைத்து கூட்டுறவுச் சங்களிற்கும் பொறுப்பாக நியமிக்கப்பட்டவர்  திரு, மகாதேவா( மயூரண்ணா) ஆவார்.
இந்த மாதிரிச் செயலகத்தின் வளர்ச்சிப்போக்கில்  அன்றைய பிரதித்தலைவரும், மக்கள் முன்னணித் தலை வருமாகிய  மாத்தையா அவர்களால் “ நிழல் நிர்வாகம்” என்ற பெயர் வைக்கப்பட்டது. இந்த பெயருடன் புதிய செயலகம் ஒன்றும் சுண்டுக்குளி  பாடசாலைக்கு எதிரில் உள்ள இடத்தில்  திறக்கப்பட்டு ”வில்லீஸ்” என்ற போராளி  பொறுப்பாக நியமிக்கப்பட்டார். “தமிழீழ நிர்வாக சேவை” என்று மூன்றாவது தடவை பெயர் மாற்றத்துடன்  பூவண்ணன் பொறுப்பாகவும், துணைப்பொறுப்பாக திரு. சின்னப்பா மாஸ்டருடன் முள்ளிவாய்க்கால் வரை பயணித்த மயூரன் அண்ணாவின் இழப்பு  ஏழாலை கிராமத்திற்கும், கூட்டுறவு சங்கங்களிற்கும், சிக்கன கூட்டுறவுச்சங்களிற்கும் , இலங் கையிலுள்ள கூட்டுறவாளர்களிற்கும், குடும்பத்திற்கும் பேர் இழப்பாகும்.
1984 தொடங்கி 1991 வரை மகாதேவன் என்று அழைத்த நாங்கள் 1991 இலேயே மயூரண்ணா என்று அழைக்க தொடங்கினோம். அன்றிலிருந்து முள்ளிவாய்க் கால்வரை சென்று இன்று வரை மக்கள் சேவையே தனது  முழு மூச்சாக கொண்டு  உழைத்த மயூரண்ணா மூச்சடங்கி போனார். மயூரண்ணா  நீங்கள் என்னுடன் என்னங்கோ , என்னங்கோ என்று கதைப்பது என் உயிருள்ளவரை என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
இ. ராஜன்