அத்துமீறி மீன் பிடிக்கும் இந்திய மீனவர்கள் – முல்லைத்தீவில் மீனவர்கள் தொடர் போராட்டம்

முல்லைத்தீவு மீனவர்கள் ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

 முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் இழுவை படகுகளை பயன் படுத்தி அத்துமீறி மீன் பிடியில் ஈடுபடுவதனால்  தொடர்ச்சியாக தமது வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் எல்லை தாண்டி வருகின்ற மீனவர்களை கட்டுப்படுத்த இலங்கை கடற்படையினர் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை எனவும் உரிய வகையில் எல்லைதாண்டி வந்தவர்களை கட்டுப்படுத்தினால் தமது வாழ்வாதாரத் தொழிலை சிறந்த முறையில் செய்ய முடியும் எனவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்

இந்திய -இலங்கை  பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடி விவகாரத்தில் இந்தியத் தரப்பினரே நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.