எம்.பி.க்கள் மூவருக்கு கொரோனா உறுதி – 31 எம்.பி.க்கள் தனிமைப்படுத்தலில்

கொரோனாத் தொற்று அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளநாடாளமன்ற உறுப்பினர்களது எண்ணிக்கை 31 ஆக உயர்வடைந்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, ரவூப் ஹக்கீம், வாசுதேவ நாணயக்கார ஆகிய மூன்று பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் தொடர்பில் இருந்த அடிப்படையில் இவ்வாறு 31 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிமைப்படுத்தலுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர் என நாடாளுமன்ற தகவல் தொலைத் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.