Tamil News
Home செய்திகள் ஊரடங்கு காலத்திலும் தொழிற்சாலைகள் இயங்கும் –BOI அறிவிப்பு

ஊரடங்கு காலத்திலும் தொழிற்சாலைகள் இயங்கும் –BOI அறிவிப்பு

கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள இலங்கை முதலீட்டுச்சபை(BOI) தொழிற்சாலைகள் கொரோனா ஊரடங்கு காலத்திலும் எவ்வித இடையூறுமின்றி இயங்குமென அறிவித்துள்ளது.

கட்டுநாயக்க, பியகம, வத்துபிட்டிவல, மல்வத்த மற்றும் மீரிகம ஆகிய ஏற்றுமதி வலயங்களிலுள்ள நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடரும் என்பதுடன் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் கண்டிப்பாக கடைப் பிடிக்கப்படும் என்றும்   தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு மேற்குறிப்பிட்ட வலயங்கள் தவிர்ந்த வெளியிடங்களில் அமைந்துள்ள முதலீட்டு சபையில் பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகளும் இயங்கவுள்ளன.

இதேவேளை ஊரடங்கு குறித்த முதலீட்டு சபையின் நடைமுறைகள் அதன் www.investsrilanka.com. இணையத்தளத்தில் உள்ளதாகவும் இலங்கை முதலீட்டுச்சபை அறிவித்துள்ளது.

Exit mobile version