Tamil News
Home செய்திகள் ஊரடங்குச்சட்ட உத்தரவை மீறிய 29,694 பேர் கைது..!

ஊரடங்குச்சட்ட உத்தரவை மீறிய 29,694 பேர் கைது..!

நாடாளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மீறி பயணித்த 29 ஆயிரத்து 694 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவற்துறை ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் 7 ஆயிரத்து 646 வாகனங்கள் காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்று மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரங்கு சட்டத்தை மீறிய 331 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த காலப்பகுதியில் 72 வாகனங்களை காவற்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

Exit mobile version