வவுனியா மாவட்டத்தில் 103உறுப்பினர் களை தெரிவு செய்வதற்காக 1,231 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதுவரை நகரசபையாக இருந்து தரமுயர்த்தப்பட்ட வவுனியா மாநகர சபைக்கு முதலாவது தேர்தலாக இது அமைந்துள்ளது.
இம்முறை மாநகர சபையில் மொத்தமாக 20 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். அதற்காக 10அரசியல் கட்சிகளும் 2 சுயேட்சை குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தன. அவற்றில் மக்கள் போராட்ட முன்னணியின் வேட்பு மனு முழுமையாக நிராகரிக் கப்பட்டுள்ளது.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு 26 உறுப்பினர்கள் தெரிவு செய்வதற்காக 12 அரசி யல் கட்சிகளும் 4 சுயேட்சை குழுக்களும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்த நிலையில் இரு அரசியல் கட்சிகள் மற்றும் ஒரு சுயேட்சை குழுவின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
வெண்கல செட்டிகுளம் பிரதேச சபைக்கு18 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதற்காக 10 அரசியல் கட்சிகளும் 2சுயேட்சை குழுக்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் விண்ணப்பித்த 12 தரப்புக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
வவுனியா வடக்கு பிரதேச சபையில் 23உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதற்காக 09 அரசியல் கட்சிகளும் 2சுயேட்சைகுழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில்அவற்றில்,இரண்டு சுயேட்சை குழுவின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையில்16 உறுப்பினர்கள் தெரிவு செய்யப் படுவதற்காக 7அரசியல் கட்சிகளும் 2 சுயேட்சை குழுக்களும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்த நிலையில் அவை அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்தில் 13உள்ளூ ராட்சி சபைகளில் போட்டியிடுவதற்காக 126 அரசியல் கட்சிகளும், 12சுயேட்சைக் குழுக்க ளும் தமது வேட்பு மனுக்களை கையளித்திருந்தன. இதில் 23அரசியல் கட்சிகளினதும், 03சுயேட்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக் கப்பட்டு 103 மனுக்கள் அரசியல் கட்சிகளினதும், 03சுயேட்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளூ ராட்சி மன்றங்களுக்கு 139 அரசியல் தரப்பினர் கட்டுப்பணம் செலுத்திய நிலையில் 118 மட்டுமே அரசியல் தரப்பினரால் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் 17 வேட்பு மனுக்கள் நிரா கரிக்கப்பட்டுள்ளதுடன் 101 வேட்புமனுக்கள் ஏற் றுக் கொள்ளப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் 10 உள்ளூ ராட்சி மன்றங்களுக்காக 19கட்சிகளின் 122 வேட்புமனுக்கள் மற்றும் சுயாதீன குழுக்களால் 24 வேட்புமனுக்கள் உள்ளடங்கலாக 146 வேட்பு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அவற்றில் 19 அரசியல் கட்சிகள் மற்றும் 3சுயாதீன குழுக்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இந்த நிராகரிப்புக்கு அதிகமாக பிறப்புச் சான்றிதழின் பிரதிகள் இணைக்கப்பட்டமை, அத்தாட்சிப்படுத்தப்படாத பிறப்புச்சான்றிதழ்கள் இணைக்கப்பட்டமை, சமாதான நீதிவானின் கையொப்பம் இன்மை உள்ளிட்ட விடயங்களே காரணங்களாக உள்ளன.
இந்நிலையில் தமது வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய தரப்புக்கள் நீதி மன்றத்தினை நாடியிருக்கின்றன.
இதில் முதற்கட்ட நடவடிக்கையில் அவை உயர்நீதிமன்றத்தினை அணுகிய நிலையில் உயர்நீதிமன்றம் ‘மேன்முறையீட்டு நீதிமன்றத் துக்கே அதிகாரம் உள்ளதாக அறிவித்தாகிவிட்டது. அடுத்தகட்டமாக மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முன்னதாக, புத்தளம், கொழும்பு மாவட் டங்களைச் சேர்ந்த அரசியல் தரப்பினர் வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றினை நாடியிருந்த நிலையில் குறித்த மனுக்களை மீள ஏற்றுக்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு கொழும்பு மாநாகர சபை உட்பட பல சபைகளுக்கான தேர்தல் செயற்பாடுகளை மே 16ஆம் திகதி வரையில் இடை நிறுத்தியுள்ளதோடு ஆட்சேபனைகளை சமர்ப்பிப் பதற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில், வடக்கு,கிழக்கை மையப்படுத்திய கட்சிகளும் மேல் நீதிமன்றத்தினை நாடினால் நீதிமன்றம் விடுமுறைக்காலம் அடுத்து வருவதால் குறித்த சபைகளுக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதற்கான வாய்ப்புக்களே அதிகமாக உள்ளன.
நான்காவதாக, தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப் பட வேண்டும் என்ற சிந்தனை பொதுமக்கள் மத்தியில் இருந்தாலும் அதற்கான முனைப்புக்கள் எவையும் செய்யப்படவிலலை. இதனால் தமிழ் மக்களுக்கும், தமிழ்க் கட்சிகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகமாகியுள்ளது. இந்த இடைவெளியானது தமிழ் மக்களின் வாக்களிப்பில் செல்வாக்குச் செலுத்தலாம். வாக்களிப்பில் பங்கேற்பதைக்குறைக்கும், அலட்சி
யமாக இருத்தல், போன்ற நிலைமைகளை தோற்று விக்கும்.
அதேபோன்று, உள்ளூராட்சி மன்றங் களுக்கான தேர்தலில் தமிழ்க் கட்சிகள் ஒன்று படுவதால் அதிகளவில் நன்மைகள் ஏற்பட்டு விடப்போவதில்லை. மாறாக அக்கட்சிகள், தனித்தனியாக போட்டியிட்டாலும் பின்னர் சபைக ளின் ஆளுகைகளை தமிழ்த் தரப்பின் பக்கம் வைத்துக்கொள்வதற்கான ‘புரிந்துணர்வுக்குச் செல்வது தான்’ பொருத்தமானது. ஆனால் இந்த விடயம் அரசியல் கட்சிகளாலும் சரி, சிவில் தரப்பினராலும் சரி ‘மக்கள் மயப்படுத்துவதற்கு’ நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
ஐந்தாவதாக, தேசிய மக்கள் சக்தியைப் பொறுத்தவரையில் ‘தனிக்கட்சி’ ஆளுகையையே இலக்காக கொண்டிருக்கின்றது. இதனால் வடக்கு, கிழக்கில் உள்ள சபைகளின் ‘ஆளுகையில் ஆதிக்கம்’ செலுத்துவதற்கான வாய்ப்புக்கள் பெரும்பாலும் குறைவாக இருக்கிறது. இதனால், தமிழர் தரப்பு அரசியல் கட்சிகளுக்கும், சுயேட்சைக் குழுக்களுக்கும் ஓரளவு நிம்மதிப் பெருமூச்சு விடக்கூடியதாக இருந்தாலும் அங்கத்தவர்களின் எண்ணிக்கை இழப்பினைச் சந்திப்பது தவிர்க்க முடியாததாகவே இருக்கப்போகின்றது.
தமிழ் மக்களுக்கான புரிதல் முக்கியம் நிலைமைகள் இப்படியிருக்கையில் உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான தமிழ் மக்களுக்கான புரிதல் மிகவும் முக்கியமானதொரு விடயமாகும். அந்தப்புரிதல் இருந்தால் மட்டுமே, அவர்கள் தமது வாக்குகளை சரியான தரப்புக்கு அளிக்க முடியும்.
அந்த வகையில், உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான நீண்ட கால வரலாறு இலங்கைக்கு உண்டு. ஆனால், தற்போதைய உள்ளூராட்சி மன்றங்கள் பிரித்தானிய ஏகாதி பத்தியவாதிகளாலேயே உருவாக்கப்பட் டன. பிரதேச ரீதியான பிரச்சினைகளுக்கு பிரதேச ரீதியாகவே பங்கேற்பு ஜனநாயகரீதியில் தீர்வு காண்பது உள்ளூராட்சி மன்றங்கள் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. அதிகாரத்தை மக்கள் மீது சுமத்தும் மேலாண்மை அரசியலுக்குப் பதிலாக மக்கள் தமது செல்வாக்கைச் செலுத்த வேண்டும் என்பதே உள்ளூராட்சியின் பின்னணியில் அமைந்துள்ள கோட்பாடாகும்.
குழுவாதத்திற்குப் பதிலாக கூட்டு முயற்சியும், பெரும்பான்மை சிறுபான்மையை புறக்கணிப்பதைத் தவிர்ப்பதும் உள்ளூராட்சியின் நோக்கங்களாகும். உள்ளூராட்சி பற்றிய சட்டங் களை ஆராயும்போது தெளிவாகின்றது.
பங்கேற்பு ஜனநாயகம், வினைத்திறன் மற்றும் ஆட்சியின் போது மக்களின் கண்காணிப்பை அதிகரித்தல் என்பன உள்ளூராட்சிச் சபைகளை அமைப்பதன் அபிலாஷையாகும். ஓர் பிரஜையின் பிறப்பு முதல் இறப்பு வரை வழங்கப்படும் சேவைகளைக் கண்காணிப்பதற்கான முன்னுரி மைப்படுத்தல் மக்கள் பிரதிநிதிகளினதும், மக்களினதும் பங்கேற்புடன் கொள்கைகளை வகுத்து தீர்மானங்களை மேற்கொண்டு நடைமுறைப் படுத்துவதன் மூலமே செய்யப்பட வேண்டும்.
உள்ளூராட்சி என்ற வரையறைக்குள் கொள்கைகளை வகுப்பதற்கும், கண்காணிப்பதற்கு மான முக்கிய ஜனநாயகக் கருவி உள்ளூராட்சி சபைகளாகும் உள்ளுர் மட்டத்தில் பொது மக்களின் சுகாதாரம், பொதுப் பயன்பாட்டுச் சேவைகள், பொதுத் தெருக்கள், மக்கள் நலன்புரி, வசதிகள், பொழுதுபோக்கு என்பனவற்றை நிர்வகித்துப் பராமரிப்ப தற்காகவே உள்ளூராட்சி நிறுவனங்கள் மக்கள் பிரதிநிதிகள் மன்றங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.
தமது வருமானத்தில் ஒரு பகுதியையேனும் வரிப்பணமாக சேகரிப்பது உள்ளூராட்சி நிறு வனங்களின் விசேட பண்பாகும். சட்டரீதியான கட்டுப்பாடுகள் இப்போது இரண்டாவது விசேட பண்பாகும். குறிப்பிட்ட உள்ளூ ராட்சி நிறுவ னங்களுக்கு உசிதமான முறையில் தமது அதிகார விடயப்பரப்பிற்கு ஏற்ற வகையில் செயற்படும் ஆற்றல் அவற்றிற்கு உண்டு. ஆனால், பிரதேசரீதியான தற்றுணிவு இரு வகையில் வரையறுக்கப்பட்டுள்ளது. முதலாவது, குறிப்பிட்டதொரு சேவையை தான் விரும்பியவாறு மேம்படுத்துவதற்குத் தேவை யான சாதாரண அதிகாரங்கள் உள்ளூராட்சி நிறுவனங்களுக்குக் கிடையாது. வரையறுக்கப் பட்டதும் குறிப்பிடத்தக்கதுமான ஒரு சில சட்டவாக்க அதிகாரங்களே உள்ளூராட்சி நிறு வனங்களுக்கு உண்டு. இரண்டாவதாக அவை மத்திய அரசாங்கத்தால், அல்லது இரண்டாம் மட்ட அரசாங்கங்களால் நிர்வகிக்கப்படுகின்றன.
அத்துடன் செயற்குழு முறை, பகிரங்கக் கணக்காய்வு, மக்களின் ஆலோசனைகளுக்குச் செவிமடுத்தல் என்பன மூலம் மேற்கூறிய நோக் கங்கள் தெளிவாகின்றன. ஆனால், உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்தலின் போது கட்டுப்படுத்தப்படும் சட்டங் கள் வாயிலாக மேலாண்மை அரசியல் உள்ளூராட்சி மன்றங்களில் பிரவேசித்துள்ளன.
அந்நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு மக்கள் ஆணைக்கு மாத்திரமே உரித்துள்ளது. ஆகவே, தம்மை ஆள்வதற்கான சரியான பிரதி நிதிகளை தெரிவு செய்வது தான் இந்தத்தேர்தலில் அடிப்படை அம்சமாகும்.
அவ்வாறான பிரதிநிதிகள், கொள்ளைப் பற்று, சமூக அக்கறை, வெளிப்படைத் தன்மை, ஊழல்,மோசடிகளில் தொடர்பற்ற நிலை, தனி மனித ஒழுக்கம் உள்ளிட்ட விடயங்களை வைத்து அளவீடு செய்வதே பொருத்தமானதாகும்.
அவ்விதமாக தமிழ் மக்கள் தங்களுடைய சபைகளுக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்யும் பட்சத்தில், ‘எமது ஊர் எம்முடன் என்ற கோசம்’ வெற்றிபெறுவது மட்டுமல்ல இனவிடுதலைக் கான எதிர்கால அரசியல் பிரதிநிதித்துவ தலை முறையும் தளிர்க்கும் நிலையை அடையும்.