Home செய்திகள் உண்டியலில் பணத்தை போடசென்றவர் விபத்தில் காயம்

உண்டியலில் பணத்தை போடசென்றவர் விபத்தில் காயம்

வவுனியா நெடுங்கேணி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பேருந்துநடத்துனர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில் முல்லைதீவில் இருந்து வவுனியா நோக்கிசென்ற தனியார் பேருந்து நெடுங்கேணி நொச்சியடி ஜயனார் ஆலயத்தில் வழிபாட்டிற்காக நிறுத்தப்பட்டது.இதன்போது பேருந்தின் நடத்துனர் ஆலயத்தின் உண்டியலில் பணத்தினை இடுவதற்காக வீதியை கடந்து சென்றபோது திருகோணமலையில் இருந்து முல்லைதீவு நோக்கிபயணித்த கார் அவரை மோதியது.assaa உண்டியலில் பணத்தை போடசென்றவர் விபத்தில் காயம்

விபத்தில் பேருந்தின் நடத்துனர் காயமடைந்த நிலையில் நெடுங்கேணி பிரதசே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

விபத்து தொடர்பாக நெடுங்கேணி போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version