ரஸ்யாவின் அணுக்குண்டுகளை வீசும் விமானங்களின் வான் படைத்தளங்கள் மீது உக்ரைன் மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து ரஸ்யாவினதும், அதன் கூட்டணி நாடான பெலாருஸினதும் தலைவர்கள் வடகொரியா மற்றும் சீனாவுக்கு அவசரமாக சென்றுள் ளது எதிர்வரும் நாட்களில் மிகப்பெரும் அனர்த்தங்கள் நிகழவுள் ளதை காட்டுவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
ரஸ்யாவின் பாதுகாப்புச் சபையின் தலைவர் Sergei Shoigu வடகொரியாவிற்கு புதன்
கிழமை(4) அவசரமாக சென்றுள்ளதுடன் வடகொரிய அதிபருடன் பேச்சுக்களையும் மேற்கொண்டுள்ளார்.
அதேசமயம் பெலாரூஸின் அதிபர் Aleksandr Lukashenko சீனாவுக்கு புதன்கிழமை(4) அவசர
மாக சென்று சீன அதிபர் சி ஜின்பிங்கை சந்தித்துள்ளார். இரு தலைவர்களும் தற்போது ஏற்
பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து ஆராய்ந்ததாக தெரிவிக்கப்படுகின் றது.
இதனிடையே தலிபான்கள் மீதான தடையை நீக்குவது தொடர்பில் ரஸ்யா முடிவெடுத்துள்ளது. மேலும் ஆப்கானிஸ்தா னின் தூதரகம் ஒன்றை ரஸ்யாவில் திறப்பதற்கும், சங்காய் கூட்டமைப்பில் தலிபான் களை இணைத் துக்கொள்ளவும் ரஸ்யா திட்ட மிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, கடந்த முதலாம் நாள் ரஸ்யாவின் நான்கு வான்படைத்தளங்கள் மீது உக்ரைன் மேற்கொண்ட ஆழஊடுருவும் தாக்குதலில் ரஸ்யாவின் மிகவும் நவீனமானதும், விலை உயர்ந்ததுமான ஏ50 ரக விமானங்கள் அழிக் கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்தபோதும் தற்போது அது தவறானது என தெரியவந்துள்ளது.
செய்மதி புகைப்படங்களின் ஆதரங்களின் அடிப்படையில் அது உறுதிப்படுத்தப்பட்டுள் ளது. தாக்குதலுக்கு பின்னர் வெளியாகிய செய்மதிப் படங்களில் ஏ50 ரக விமானங்கள் சேதங்கள் எதுவுமின்றி உள்ளது தெளிவாக காணப்படுகின்றது. இந்த தாக்குதலில் ரஸ்யா வின் 4 ரக TU-95 விமானங்களும், ஒரு TU-22 ரக விமானமும், ஒரு சரக்கு விமானமும் அழி வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையயே பயங்கரவாத நடவடிக் கைக்கு மாறிய உக்ரைனுடன் தான் பேச்சுக்களை நடத்தப்போவதில்லை என ரஸ்ய அதிபர் விளடிமீர் பூட்டீன் தெரிவித்துள்ளார்.ரஸ்யாவின் பொதுமக்கள் வாழும் இடங்களில் உக்ரைன் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருவதால் இந்த முடிவை அவர் எடுத்
துள்ளார். இந்த நிலையில் யார் பேசுவார்கள், பயங்கரவாதிகளுடன் யார் பேச்சுக்களை நடத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.