இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அறிவிப்பு

காசா முனையில் தீவிர மோதல் நடைபெற்று வந்த நிலையில்,  இஸ்ரேல் நாட்டுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் உறுதி செய்யப் பட்டுள்ளதாக ஹமாஸ் அறிவித்து உள்ளது.

இந்த சண்டை நிறுத்தம் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வரும். இதுவரை நடைபெற்ற மோதலால் சுமார் 240 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் காசாவை சேர்ந்தவர்கள் மோதல் முடிவுக்கு வந்தவுடன் பாலத்தீன மக்கள் காசாவின் சாலைகளுக்கு வந்து “இறைவன் சிறப்பானவர், இறைவனுக்கு நன்றி” என கோஷம் எழுப்பினர்.

இந்த சண்டையில் இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் ஆயுதக் குழு என இரு தரப்புமே தாங்கள் வெற்றி பெற்றதாக அறிவித்து கொண்டன.