இஸ்ரேல்-ஈரான் போர்: ஈரானில் 639 பேர் பலி!

இஸ்​ரேல் விமானப் படை தாக்​குதலில் ஈரானில் இது​வரை 639 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். 2,000-க்​கும் மேற்​பட்​டோர் படு​கா​யம் அடைந்​துள்​ளனர். ஈரானின் முக்​கிய அணு சக்தி தளங்​கள், எண்​ணெய் வயல்​களும் அழிந்​துள்​ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 13-ம் திகதி அதி​காலை ஈரான் மீது இஸ்​ரேல் விமானப் படை திடீர் தாக்​குதல் நடத்​தி​யது. இரு நாடு​களிடையே 7-வது நாளாக நேற்​றும் போர் நீடித்​தது. கடந்த 7 நாட்​களில் ஈரான் தலைநகர் டெஹ்​ரான் உட்பட அந்த நாட்​டின் 1,100 இடங்​கள் மீது இஸ்​ரேல் போர் விமானங்​கள், ஆளில்லா விமானங்கள்  தாக்​குதல் நடத்தி உள்​ளன. குறிப்​பாக ஈரானின் அணு சக்தி தளங்​கள், ஆயுத உற்​பத்தி ஆலைகள், எண்​ணெய் வயல்​கள் மீது மிகப்​பெரிய தாக்​குதல் நடத்​தப்​பட்டு இருக்​கிறது. இதில் ஈரானின் 20 அணுசக்தி தளங்​கள், 16 எண்​ணெய் வயல்​கள் அழிக்​கப்​பட்டு இருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

ஈரான் இராணுவ தரப்​பில் இஸ்​ரேலை குறி​வைத்து இது​வரை 400 ஏவு​கணை​கள் வீசப்​பட்டு உள்​ளன. மேலும் 1,000 ஆளில்லா விமானங்கள் மூல​மும் தாக்​குதல்​கள் நடத்​தப்​பட்டு உள்​ளன. இஸ்​ரேலின் டெல் அவிவ் உட்பட பல்​வேறு பகு​தி​களை குறி​வைத்து ஈரான் இராணுவம் தாக்​குதல் நடத்தி வரு​கிறது. கடந்த 7 நாட்​களில் இஸ்​ரேல் முழு​வதும் 24பேர் உயி​ரிழந்​துள்​ளனர். சுமார் 200-க்​கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்​துள்​ளனர்.