Tamil News
Home செய்திகள் இளைஞர்களது வாழ்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவேன். பவீந்திரன் தெரிவிப்பு

இளைஞர்களது வாழ்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவேன். பவீந்திரன் தெரிவிப்பு

ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் இளைஞர்களது வாழ்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு பங்களிப்பேன் என்று இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரான குணபாலசிங்கம் பவீந்திரன் தெரிவித்தார்.

இளைஞர் பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் இது தொடர்பாக வவுனியாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும் போதே அவர்இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து அவர்…….

எதிர்வரும் இளைஞர்பாராளுமன்ற தேர்தலில் வவுனியா பிரதேச செயலக பிரிவில் போட்டியிடுகின்றேன் நான் வெற்றி பெறுவதற்கு அனைவரது ஆதரைவினையும் கேட்டுநிற்கின்றேன்.இளைஞர் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பலருக்கு விழிப்புணர்வு இல்லாத நிலைதற்போது காணப்படுகின்றது. எனவே நான் வெற்றிபெறும் பட்சத்தில் அது தொடர்பாக இளைஞர்களிற்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவேன்.

வவுனியா மாவட்டத்தில் உள்ள இளைஞர்களை ஒருங்கிணைத்து இளைஞர் சேவைமன்றங்களிற்குள் உள்வாங்கி அதனூடாக கிடைக்கபெறும் தொழில்வாய்புக்கள் மற்றும் ஏனையவேலைதிட்டங்களை அவர்களிற்கு பெற்றுக்கொடுத்து அதன்மூலம் வாய்புக்களை உருவாக்கி;கொடுப்பேன்.

வவுனியாவை பொறுத்தவரைகலாசாரம் சார்ந்தவிடயங்கள் ஊக்குவிக்கப்படாத ஒரு நிலை காணப்படுகின்றது.அதற்கு முன்னுரிமை கொடுத்து இன மத மொழி பேதமின்றி கலாசாரத்தைஊக்குவிக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பேன்.

அத்துடன் ஒடுக்குமுறைகளிற்குள்ளாக்கப்படும் இளைஞர்களது முன்னேற்றத்திற்கு பங்களிப்பேன்.இம்முறை வுவுனியாவில்; ஐந்துபேர தேர்தலில்;போட்டி இடும் நிலையில் நான் வெற்றிபெற்றாலும் தோல்விஅடைந்தாலும் எனது சேவைகள் தொடரும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் எனவே உங்கள் வாக்குகள் மூலம் என்னை வெற்றிபெற செய்யுங்கள்.இளைஞர்களது வாழ்கையை ஒளிஊட்டகூடிய நல்ல இளைஞர் தலைவரை உருவாக்குங்கள்.என்றார்.

Exit mobile version