Tamil News
Home உலகச் செய்திகள் இளவரசர் ஃபிலிப் காலமானார், பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு

இளவரசர் ஃபிலிப் காலமானார், பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு

பிரித்தானியா அரசி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான ஃபிலிப், தனது 99 வயதில் காலமானார். இந்த தகவலை பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.

1947ஆம் ஆண்டில் இளவரசி எலிசபெத் அரசியாவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக அவரை இளவரசர் திருமணம் செய்து கொண்டார். பிரித்தானியா அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் சேவையாற்றியவர் அவர்.

அவரது மறைவு தொடர்பாக பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தனது நேசத்துக்குரிய கணவர், எடின்பரோ கோமகன் இளவரசர் ஃபிலிப் இறந்து விட்டார் என்ற தகவலை மாட்சிமை பொருந்திய அரசி ஆழ்ந்த வருத்தத்துடன் வெளியிட்டுள்ளார்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேமுலும்”மேதகு இளவரசரின் உயிர் இன்று காலை வின்சர் கோட்டையில் அமைதியான முறையில் பிரிந்தது,” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version