இலங்கை பாதுகாப்பானது அல்ல – பிரித்தானிய நீதிமன்றம்

இலங்கையில் கைது செய்யப்படுவது மற்றும் துன்புறுத்தப்படுவது தொடர்வதாகவும், அது பாதுகாப்பானது அல்ல எனவும் பிரித்தானியாவின் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் புகலிடத் தஞ்சம் கோரிய இரு தமிழ் மக்களை இலங்கைக்கு மீண்டும் அனுப்பினால் அவர்கள் கைது செய்யப்பட மாட்டார்கள் என பிரித்தானியாவின் உள்த்துறை அமைச்சு தெரிவித்த கருத்துக்கு எதிராக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.

இலங்கையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலும் 178 பேர் இலங்கை அரச படையினரால் துன்புறுத்தப்பட்டதாக உண்மைக்கும், நீதிக்குமான அனைத்துலக செயல் திட்ட அமைப்பு ஆவணங்களை பதிவு செய்துள்ளது. இது தவிர 22 பேர் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு விசாரணைப் பிரிவில் தாம் துன்புறுத்தப்பட்டதான முறைப்பாடுகளை டேற்கொண்டுள்ளனர்.

கோத்தபாயா ராஜபக்ச அரச தலைவராக பதவியேற்ற பின்னர் 5 வழங்குகள் பதவாகியுள்ளதாக அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.