இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 10 இந்திய மீனவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
தென் மன்னார் கடற்பரப்பில் வைத்தே இந்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், இந்த இந்திய மீனவர்கள் பயணித்த மீன்பிடிப் படகும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.