இலங்கையில் 2,500 ஐத் தாண்டியது கொரோனா மரணம் – மேலும் 54 பேர் பலி

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 500 ஐக் கடந்துள்ளது.

நேற்று முன்தினம் 54 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 23 பெண்களும், 31 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.

இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 534 ஆக அதிகரித்துள்ளது.