இலங்கையில் ரிசாட் கட்சி  நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியை விட்டு நீக்கம்

இலங்கையில் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்துக்கு ஆதரவாக வாக்களித்த ரிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரையும், கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடை நிறுத்தியுள்ளதாக, அந்தக் கட்சி அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இடை நிறுத்தப்பட்டவர்களில் ஒருவரான அலிசப்றி ரஹீம் நாடாளுமன்ற உறுப்பினர், – தான் அந்தக் கட்சியின் உறுப்பினரே இல்லை என்று தெரிவித்துள்ளார்.