இலங்கையில் மேலும் 65 பேர் கொரோனாவினால் உயிரிழப்பு – பலியானோர் தொகை 2,769 ஆகியது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்றுமுன்தினம் மட்டும் 65 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 40 ஆண்களும், 25 பெண்களும் உள்ளடங்குகின்றனர் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி சாவடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 769 ஆக எகிறியுள்ளது.