இலங்கையில் கொரோனா தொற்றினால் 170க்கும் மேற்பட்டவர்கள் பலி

இலங்கையில் மேலும் 146 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 407 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 8 ஆயிரத்து 549 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேவேளை 438 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

மேலும் இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 176 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.