Tamil News
Home செய்திகள் இலங்கையில் கடந்த 17 நாளில் 37,000 பேர் கொரோனாவால் பாதிப்பு

இலங்கையில் கடந்த 17 நாளில் 37,000 பேர் கொரோனாவால் பாதிப்பு

இலங்கையில் மே மாதத்தில் நேற்று(17) வரை 37,056 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் -19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இதேவேளை கடந்த 1 ஆம் திகதி முதல் இன்று(18) காலை 6 மணி வரை கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 7,819 பேர் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் கம்பஹா மாவட்டத்தில் இதே காலகட்டத்தில் 6,230 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version