இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – மேலும் 124 மரணங்கள் நேற்று பதிவு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 124 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இதனை நேற்று உறுதிப்படுத்தியுள்ளார்.

அரச தகவல் திணைக்களம் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் ஒரே நாளில் அறிவிக்கப்பட்ட அதிக கொரோனா மரண எண்ணிக்கை இதுவாகும்.

இதன்படி நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,260 ஆக அதிகரித்துள்ளது என அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.