இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிட சர்வதேசத்துக்கு உரிமை கிடையாது – மகிந்த

இலங்கை அரசியல் மற்றும் உள்விவகாரங்களில் தலையிட சர்வதேசத்துக்கு எந்த உரிமையும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தங்காலையில் உள்ளதனது வீட்டில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டின் ஒழுக்கத்தை பாதுகாக்க முடிந்த தலைவர்கள் தெரிவுசெய்யப்பட வேண்டும். தேர்தலில் நாம்வெற்றி பெற வேண்டும். இல்லை என்றால் நாடும், இனமும் அழிந்துபோகும். கடந்த தேர்தலில் என்னை தோற்கடிக்க வெளிநாடுகள் பணியாற்றின.இம் முறை வெளிநாடுகள் செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடும்.

கடந்த தேர்தலை விட வெளி நாடுகளின் தலையீடு குறைவாக இருக்கும் எனநினைக்கின்றேன். எமது நாட்டின் அரசியல்மற்றும் உள் விவகாரங்களில் தலையிட சர்வதேசத்துக்கு உரிமையில்லை. இப்படியான தலையீடுகளை மேற்கொள்ளவேண்டாம் என அந்நாடுகளிடம் கேட்டுக்கொள்கிறேன். நாட்டு மக்கள் தாம்விரும்பியவரை தெரிவு செய்ய இடமளிக்கப்பட வேண்டும். எந்த நாடும் எமக்கு ஒன்றுதான். நாங்கள் அனைத்துநாடுகளிடம் நட்புறவாக செயற்பட்டு வருகின்றோம் என அவர் தெரிவித்தார்.