ஏமனில் உள்ள குதீஸ் அமைப்பின் மீது அமெரிக்காவின் வான்படையினர் மேற்கொண்டு வரும் தொடர் தாக்குதல்களில் அமெரிக்கா தனது இரண்டாவது எப்-18 சுப்பர் கொனெட்ற் விமா
னத்தையும் கடந்த வாரம் இழந்துள் ளது.
செங்கடலில் தரித்து நின்று தாக்குதல்களை வழிநடத்தும் அமெரிக்காவின் ஹரி ரூமர் விமானந்
தாங்கி கப்பல் மீது குதீஸ் அமைப்பினர் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய போது அதனை தவிர்க்கும் முகமாக கப்பல் அவசரமாக நகர்த்தப்பட்டபோது ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக எப்-18 விமானம் கடலில் வீழ்ந்து மூழ்கியுள்ளது.
கடந்த வருடமும் ஏமன் மீது தாக்குதல் நடத்திவிட்டு திரும்பிய எப்-18 விமானத்தை தமது கப்பல்களில் இருந்த விமான எதிர்ப்பு ஏவுகணை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. தற்போது அது இரண்டாவது விமானத்தையும் இழந்துள்ளது.
இதனிடையே அமெரிக்க படையினருக்கு உதவுவதற்காக பிரித்தானியாவின் விமானந்தாங் கிக் கப்பலும் செங்கடல் பகுதி நோக்கி செல்வதாக பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சகம் கடந்த புதன்கிழமை(30) தெரிவித்துள்ளது. அதேசமயம் அந்த பிராந்தியத்தில் உள்ள பிரித்தானியாவின் தளத்தில் உள்ள ரைபூன் தாக்குதல் விமானங்கள் அமெரிக்க வான்படையினருடன் இணைந்து கடந்த செவ்வாய்க்கிழமை(29) குதீஸ் அமைப் பின் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை(28) அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலில் தடுப்புக்காவல் முகா மில் இருந்த 68 பேர் கொல்லப்பட்டதாகவும் 49 பேர் காயமடைந்ததாகவும் குதீஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.