இனத்தைக் குறிவைத்துக் கொல்வது  இனப்படுகொலையா,,,,,,,!  (பகுதி-01) – வல்வை ந.அனந்தராஜ்

இனப்படுகொலை என்றால் என்ன என் பதற்கான சரியான விளக்கத்தைப் பெற் றுக் கொள்ளாதவர்களால் இலங்கையில் இனப் படுகொலை என்பது இடம்பெறவே இல்லை என்று வரட்டுத் தனமான வேதாந்தத்தைப் பேசி வருகின்றனர். அண்மையில் கனடாவின் பிரம்டன் நகரில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்
கால் நினைவுத்தூபியால் கொதித்தெழுந்த சிங்கள பேரினவாதிகள் வாய்க்கு வந்தபடி உளறப்போய் பிரம்டன் நகர மேயரினாலும் கனேடியப் பிரதமரினாலும் வாங்கிக் கட்டிக்கொண்ட பின்னரும் அவர்கள் திருந்துவதாக இல்லை.இனப் படுகொலை என்றால் என்ன… என்பதற்கான சரியான கருத்து, ஐக்கிய நாடுகள் ஸ்தாப னத்தினால் விளக்கப்பட்டுள்ளதை இன்று ஈழத்தில் சிங்கள இனவாதிகள் புரிந்து கொள்ளவேண்டும்.
இனப்படுகொலை அல்லது இனவழிப்பு  (GENOCIDE)  என்றால் என்ன?
“ஒரு இனத்தை முழுமையாகவோ, பகுதி பகுதியாகவோ, சமயம் மற்றும் அதன் இன வேறுபாடுகளின் நிமித்தம், தேசிய இனம் என்ற காரணங்களின் நிமித்தம் கொல்ல நினைப்பதும் அழிப்பதும் அந்த இனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற இனப்படுகொலை யாகும் என தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. 1948இல் ஐ.நா சட்ட விதி 2 இன்படி ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் சபை இனப்படுகொலை எங்கு நடந்தாலும் அதனைத் தடை செய்யப்பட்ட, தண்டனைக்குரிய மற்றும் குற்றமுறைச் செயலாக அறிவித்தது. ஆனால் அதனைப் பின்பற்றவும் நடைமுறைப்படுத்தவும் இந்த உலகம் தவறியமை காரணமாக உலகத்தின் பல பகுதிகளிலும்
இலங்கையிலும் இனவாத அரசுகளினால், இனப்படுகொலைகள் சுதந்திரமாக அரங்கேறுகின் றன. இனஅழிப்பு என்பது ஓர் இனத்தைப் போரில் அழித்து விடுவது, அவர்களை அடித்துச் சி;த்திரவதைசெய்து வாழ்விடத்தைவிட்டு வெளியேற்றுவது என்பது மட்டுமல்லாது, அவ்வினத்திற்கு எதிராக உடல் மற்றும் உள ரீதியாக புரியப்படும் கொடூரமான அல்லது கொடுமையான தாக்குதல்கள், கலாசாரத்தை அழித்தல், மத வழிபாட்டிடங்களை அழித்துப் பேரினவாதிக ளின் மத அடையாளங்களை நிறுவுதல், தமிழர்களின் தொல்பொருட் சின்னங்களை அழித்தல், பெரும்பான்மை இனங்களைக் கொண்டு குடியேற் றங்களை மேற்கொள்ளுதல், சிறுபான்மை மக்களின் மொழிஉரிமையைத் தடுத்து, அவர்களின் பூர்வீக நிலங்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டு, பல தமிழ்க்கிராமங்களும், வீதிகளும் காலப்போக்கில் சிங்களப் பெயர்களாக மாற்றப்பட்டுள்ளன. கல்விகற்றல், வேலைவாய்ப்புக்களில் பாரபட்சம் காட்டுதல், ஓர் இனத்தின் பிறப்பையும் பரம்பலையும் கட்டுப்படுத்துதல் அல்லது தடுத்தல், பலாத் காரமாக, ஒரு சிறுபான்மை இனக்குழுவை, வேறு இனக்குழுவோடு சேர்ப்பது, மதமாற்றங்களைப் பணம் கொடுத்தோ   அல்லது   பலாத்காரமாகவோ   மேற்கொள்ளல்   போன்ற  கொடூரங்களும் இன அழிப்புக்கள் தான் என்பதை 1948இல் இனப் படுகொலை குறித்த ஐநாவின் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.”
ஐக்கிய நாடுகள் அமையத்தின் இந்தத் தீர்மானம் 1951 ஜனவரியில் நடைமுறைக்கு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதற்குப் பின்னரே இலங்கையில் இவைபோன்ற இனஅழிப்புக்கள் எல்லாமே, அரசின்  ஆதரவுடன்  நடந்தேறி  வருகின்றன.  ஈழத்தமிழர்கள் மீதான இத்தகைய இனஅழிப்பு அல்லது இனப்படுகொலை (Genocide) நடவடிக்கைகள் 1949இல் ஆரம்பித்து 2009 மே மாதம் வரையும், அதற்குப் பின்னரும் நீண்டுகொண்டே செல்கின்றது. ஆனால் அந்த வகையான இனஅழிப்பு நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான எவ்வித அறிகுறிகளுமே இல்லை. இந்த விடயத்தில் இதைப் போன்ற மனித அவலங்களைத் தடுப் பதற்காக உருவாக்கப்பட்டதாக கூறப்படும் ஐ.நா போன்ற பொது அமைப்புக்களும்  இந்த இனப் படுகொலைகளுக்குத் துணைபோவது போலவே தெரிகின்றது.
இனஅழிப்பு என்பது மனிதப் படு கொலையைமட்டும் குறிப்பது அன்று. உடல் ரீதியாகவோ, உள ரீதியாகவோ  துன்புறுத்துவது,  கொலை  செய்யத்  திட்டமிடுவது  அல்லது    அழிப்பது, இனவேறுபாட்டைக்காரணங்காட்டி குழந்தை பிறப்பைத் தடுப்பது, குழந்தைகளை இடம்பெயரச் செய்வது, ஓரினத்தின் பாரம்பரியக் கலைகள், கலாசார விழுமியங்கள்,அந்த இனத்தின் அடையாளமாக விளங்கும் தொல்பொருட் சின்னங்களை அழித்தல், பண்பாட்டு நடைமுறைகள், சமய வழிபாடுகள்,   பண்டிகை கள், குடியிருப்புகள், தொழில் வளங்கள்   போன்ற வைகளை இல்லாததொழித்தல் மற்றும் வேறு எவ்வகையிலாயினும் இனவேறுபாடு காட்டுவது போன்றவை குற்றமுறைச் செயல்களாக, இனப்படுகொலைக் குற்றங்களாக சர்வதேச தடைச் சட்டத்தின்படி குற்றச்செயலாகும் என வரையறுக்கப்படுகிறது. இவற்றுள் ஏதாவதொன் றைக் குறிவைத்து ஒரு இனத்தை அழிப்பதாக இருந்தாலும் அது இனஅழிப்புத்தான்.
இதற்கான முள்ளிவாய்க்காலின் அத்தனை சாட்சியங்களும் வாக்குமூலங்களும் காணொளிக் காட்சிகளும் உலகமெங்கும் அம்பலப்படுத்தப்பட்ட போதும், இலங்கை அரசின் நீலிக் கண்ணீரைநம்பி, ஈழத்தில் நிகழ்ந்த தமிழ் இனப்படு கொலையை ஏற்றுக்கொள்வதில் உலகப் பொது அமைப்புக்களும், உலக நாடுகளும் பின்நிற்கின்ற மைதான் ஏனென்று புரியவில்லை…..!
இனப்படுகொலை (Genocide) என்ற வார்த் தையை முதன் முதலில் ரபேல் லேம்கின் என்பவர் 1944ல் வெளிவந்த “Axis Rule in Occupied Europe” என்ற புத்தகத்தில் பயன்படுத்தியுள்ளார். உலகில் நாஜிக்களால் யூதர்களுக்கு எதிராக ஹிட்லரால் மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்புதான் கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த மிகப்பெரிய இன அழிப்பு எனக் கருதப்படுகின்றது. அன்று, யூதர்களுக்கு எதிராக ஹிட்லர் புரிந்த இனஅழிப்பு பெரும் அச்சத்தையும் நினைத்துக்கூட பார்க்க முடியாத சம்பவங்களாகவும் இன்றைக்கும் இலங்கை யின் தமிழினப் படுகொலைகள் நினைவு படுத்து கின்றன. அந்த வகையில் உலகின் பல நாடுகளிலும்இடம்பெறும் இன அழிப்பை இன்று உலக நாடகள் ஏற்றுக் கொண்டுவருகின்றன.
தொடரும்…