Tamil News
Home செய்திகள் இந்தியத் தூதுவரை இன்று சந்திக்கின்றது கூட்டமைப்பு – முக்கிய விவகாரங்கள் ஆராயப்படும்

இந்தியத் தூதுவரை இன்று சந்திக்கின்றது கூட்டமைப்பு – முக்கிய விவகாரங்கள் ஆராயப்படும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழு இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பால்கேயை இன்று சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளது. இன்று காலை கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெறவிருக்கின்றது.

கூட்டமைப்பின் தலைவர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொள்கின்றார்கள்.

தற்போதைய அரசியல் நிலை உட்பட பல முக்கியமான விடயங்கள் இதன்போது ஆராயப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version