Tamil News
Home உலகச் செய்திகள் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதலில் 7 வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதலில் 7 வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 7பேர் பலியானதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் பத்ஹிஸ் மாகாணத்தில் உள்ள இராணுவச் சோதனைச் சாவடியில் தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்பு வீரர்கள் 7பேர் பலியாகினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவிற்குக் கொண்டுவர தலிபான்களின் நிபந்தனைகளை ஏற்று 900 தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையே கத்தாரில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அதிபர் அஷ்ரப் கானி ஒப்புதல் அளித்திருந்தார். இந்த நேரத்திலேயே தலிபான்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். ஆனால் தலிபான்கள் தரப்பில் இது பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மேற்படி தாக்குதல் அதிபர் அஷ்ரப் கானிக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.

Exit mobile version