நாட்­டினை ஆண்டு வரும் ஆட­சி­யா­ளர்கள் மக்கள் மத்­தியில் மத­வா­தத்­தையும் இன­வா­தத்­தையும் வளர்த்து வரு­கின்­றனர். கடந்த 2009 ஆண்டு உள்­நாட்டு போர் முடி­வ­டைந்­தது. அதன் பின்னர் மஹிந்த ராஜபக்  இந்த நாட்­டினை ஆட்சி செய்தார்.அப்­போது வடக்கில் காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­காக யாரும் போராட முன்­வ­ர­வில்லை.எமது கட்­சி­யி­னரே முதன்­மு­தலில் வடக்கில் காணாமல் ஆக்­கப்­ப­ட­ட­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை வெளிப்­ப­டுத்த வேண்டும் என போராட்டம் நடத்­தினர்.

அப்­போது முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷவின் அடி­யாட்­க­ளினால் எமது கட­சியின் செயற்­பாட்­டா­ளர்கள் மீது கொடூ­ர­மான தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றது.  இதனால் படு­கா­ய­ம­டைந்தும் இருந்­தனர்.

போர் முடி­வுக்கு வந்து ஒரு தசாப்த கால­மா­கியும் இந்த நாட்­டினைக் கட்­டி­யெ­ழுப்ப முடி­ய­வில்லை. இதற்கு காரணம் ஊழல்.  மஹிந்த ஆட்­சியில் ஊழல் நடந்தால் அதனை ஐக்­கிய தேசியக் கடசி ரணில் அரசு காப்­பாற்றும். ரணில் ஆட்­சியில் ஊழல் நடந்தால் மஹிந்த அரசு ரணிலை காப்­பாற்றும் இவ்­வாறு ஊழல்­வா­தி­களே நாட்­டினை மாறி மாறி ஆடசி செய்து வரு­கின்­றனர்.

தற்­போ­தைய அரசு மஹிந்த காலத்தில் நடை­பெற்ற ஊழல் விசா­ர­ணை­களை  முன்­னெ­டுத்­தாலும் அது வெறும் கண்­து­டைப்பு மட்­டுமே.  மஹிந்த காலத்து ஊழல்­க­ளுக்கு போதிய ஆதா­ரங்கள் ரணி­லிடம் இருந்தும் அவர்கள் மஹிந்­தா­வையும் அவ­ரது குடும்­பத்­தையும் காப்­பாற்றி வரு­கின்­றனர்.

இனி­வரும் காலங்­களில் மஹிந்த குடும்பம் ஆட்­சிக்கு வந்தால் கூட ரணிலின் ஆட்­சியில் நடை­பெற்ற மத்­திய வங்கி பிணை முறி மோசடி தொடர்­பாக எவ்­வித நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­பட மாட்­டாது.  இவ்­வா­றான ஊழல்­வா­தி­களை மக்கள் ஒதுக்கி புதிய மக்கள் ஆட்­சி­யென்றை அமைக்க எமது கட்­சிக்கு ஆத­ர­வினை தர வேண்டும். தற்­போ­தைய அரசு வெறு­மனே கட்­டி­டங்­களை கட்டி வரு­கின்­றது. அதன் ஊடாக அபி­வி­ருத்­தியை முன்­னெ­டுக்க முடி­யாது அனைத்து துறையிலும் முன்னேற்றத்தை கொண்டு வரவேண்டும்.மஹிந்த,ரணில்,மைத்திரி தரப்புகள் நாட்டு மக்கள் மத்தியில் இனவாதத்தையும்,மத வாதத்தையும் பரப்பி வருகின்றனர்.இவர்களுக்கு இவை இல்லாது விட்டால் அரசியல் இல்லை என்றார்.