ஆக்கிரமிப்பு சின்னமாக கருதப்பட்ட கிரிமியாவின் முக்கிய பாலத்தை தாக்கிய உக்ரைன்!

கிரிமியாவின் முக்கிய பாலமொன்றை நீருக்கடியில் வெடிபொருட்களை வெடிக்கவைத்து  தாக்கியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

பலமாதநடவடிக்கைகளின் பின்னர் இந்த பாலத்தை வெற்றிகரமாக தாக்கியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

2014 இல் கிரிமியாவை ஆக்கிரமித்த பின்னர் ரஸ்யா கட்டிய கேர்ச் பாலத்தையே தாக்கியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

2018 இல் ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இதனை திறந்துவைத்திருந்தார். உக்ரைனில் அது ஆக்கிரமிப்பு சின்னமாக கருதப்பட்டது,

பாலத்தின் முக்கிய பகுதிகளில் 1100 கிலோ டிஎன்டி வெடிபொருட்களை வெடிக்கவைத்ததாக தெரிவித்துள்ள உக்ரைனின் பாதுகாப்பு சேவையான எஸ்பியு இது பாலத்தை தாங்கிநிற்கும் கட்டுமானங்களிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

முதலாவது வெடிபொருள் பொதுமக்களிற்கு எந்த பாதிப்பும் இன்றி வெடிக்கவைக்கப்பட்டது என உக்ரைன் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட பாலத்தை மூடிய பின்னர் திறந்துள்ளதாக ரஸ்யா முதலில் தெரிவித்திருந்தது எனினும் பின்னர் பாலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக உள்ளுர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

உக்ரைன் பாதுகாப்பு சேவை தனது இயக்குநர்லெப்டினன்ட் ஜெனரல் வாசில் மல்யுக் இந்த நடவடிக்கைக்கு தலைமை தாங்கினார் என தெரிவித்துள்ளது.

இதேவேளை டெலிகிராம் பதிவொன்றில் 2022 , 2023 இல் உக்ரைன் கிரிமியா பாலத்தை தாக்கியது நீருக்கடியிலான அந்த பாரம்பரியத்தை தொடர்கின்றோம் என அவர் தெரிவித்தார் என உக்ரைனின் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டுள்ளது.

எங்கள் நாட்டின் ஆள்புலத்திற்குள் ரஸ்;யாவின் சட்டவிரோத கட்டமைப்பு எதுவும் இருக்க முடியாது,கிரிமியா பாலம் ஒரு நியாயபூர்வமான இலக்கு , எதிரி தனது படையினருக்கான விநியோகத்திற்காக இந்த பாலத்தை பயன்படுத்துகின்றான் என அவர் தெரிவித்துள்ளார்.