Tamil News
Home செய்திகள் அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட 41 இலங்கையர்கள் நாடு கடத்தல்

அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட 41 இலங்கையர்கள் நாடு கடத்தல்

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட போது, அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு கிறிஸ்மஸ் தீவில் தங்க வைக்கப்பட்டிருந்த 41 இலங்கையர்கள், அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு இன்று (09) காலை விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு  அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான ASY-013 விமானத்தில் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவிலிருந்து தமது பயணத்தை ஆரம்பித்த இவர்கள் இன்று காலை 9.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணம் மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும், இவர்கள் பல நாள் மீன்பிடி படகுகள் மூலம் கடல் கடந்து அவுஸ்திரேலியா சென்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

Exit mobile version