01. போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக எதிர்வரும் மே 28ஆம் திகதி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளைத் தாக்கல் செய்யுமாறு அனுராதபுரம் தலைமை நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (03) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
செல்லுபடியாகும் சாரதி உரிமம் இல்லாமல் காரை செலுத்தியதுடன் போக்குவரத்து அதிகாரிகளின் கடமையைத் தடுத்ததாகவும், அவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட அவர், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.