அரசியல் செயற்பாட்டாளரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி சபைக்கான வேட்பாளருமான டொன் பிரியசாத் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகளை கைது செய்ய இரண்டு காவல்துறையில் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
கொலன்னாவை மீதொட்டமுல்லயில் உள்ள ‘லக்சந்த செவன’ அடுக்குமாடி குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை (22) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் டொன் பிரியசாத் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய இரண்டு சந்தேகநபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களை கைதுசெய்ய இரண்டு காவல்துறையினர் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் இடம்பெற்ற பகுதியில் இருந்து பெறப்பட்ட சி.சி.ரி.வி. கமராக் காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.
டொன் பிரியசாத் அவரின் குடியிருப்பு வளாகத்தில் நேற்றைய தினம் இரவு விருந்துபசாரம் ஒன்றில் கலந்து கொண்டிருந்தபோதே துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.