அமெரிக்க கடற்படையின் சிறப்பு படையணி திருமலையில்

கடந்த 13ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பலன்ஸ் ஸ்ரைல் 2019/01 திட்டத்தின் கீழ், அமெரிக்க இராணுவத்தின் சிறப்புப் படையணியைச் சேர்ந்த இராணுவத்தினரால் சிறிலங்கா இராணுவத்தினருக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருகின்றது. இந்த பயிற்சிகள் எதிர்வரும் ஜுலை 05ஆம் திகதி நிறைவடையும்.

மூன்று வாரங்கள் நடைபெறும் இப்பயிற்சியில் சிறிலங்கா கடற்படையின் சிறப்பு படகு அணியைச் சேர்ந்த 24பேர் மற்றும் 4ஆவது அதிவேக தாக்குதல் அணியைச் சேர்ந்த 12பேர் என மொத்தம் 36 கடற்படையினர் பங்குபற்றியுள்ளனர்.

இவர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக, அமெரிக்க இராணுவத்தின் 19ஆவது சிறப்புப் படையைச் சேர்ந்த வான்வழி தரையிறக்க அணியின் 10 பயிற்சி நிபுணர்கள் திருகோணமலைக்கு வந்துள்ளனர்.