Tamil News    
Home உலகச் செய்திகள் அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவினால் பாதிக்கப்பட்ட உலக நாடுகள்

அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவினால் பாதிக்கப்பட்ட உலக நாடுகள்

அமெரிக்க அதிபர் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, அமெரிக்க வேலை அமெரிக்கர்களுக்கே என்று வாக்குறுதி அளித்தார். அதேபோல அமெரிக்காவில் விற்கும் பொருட்கள் அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்று கட்டளையிட்டார். அப்போது தான் அமெரிக்கர்களுக்கு வேலை கிடைக்கும், பொருளாதாரம் பெருகும் என்று நினைத்தார்.

ஆனால் சீனாவோ இதையிட்டு கவலை கொள்ளவில்லை. இதனால் கோபமடைந்த டிரம்ப், 200 பில்லியன் டொலர் மதிப்பிலான சீனப் பொருட்கள் மீதான வரியை உயர்த்தினார். இதற்கு சீனாவும் ஈடுகொடுத்து நடந்து கொண்டது.

இரு நாடுகளுக்கிடையான வர்த்தகப் போரில் இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகள் பலவும் பாதிக்கப்பட்டது.

அமெரிக்கா அளித்து வந்த சிறப்பு வர்த்தக சலுகையை டிரம்ப் அண்மையில் நிறுத்தினார்.

அமெரிக்க அதிபர் அணுகுண்டு சோதனை நடத்துவதாக கூறி ஈரானுக்கு எதிராக எடுத்த பொருளாதார தடை நடவடிக்கையும் உலகைப் பாதித்துள்ளது.

 

Exit mobile version