அமெரிக்காவை சேர்ந்தவர் முதல்முறையாக திருத்தந்தையாகத் தேர்வு

கத்​தோலிக்க கிறிஸ்​தவர்​களின் மத தலை​வ​ரான திருத்தந்தை பிரான்​சிஸ் தனது 88-வது வயதில் ஏப்​ரல் 21-ம் திகதி உடல்​நலக்​குறை​வால் கால​மா​னார். அவரது உடல் அடக்​கம் 26-ம்  திகதி நடை​பெற்​றது. புதிய போப்பை தேர்வு செய்​வதற்​கான நடைமுறைகள் தொடங்கி நடை​பெற்று வந்​தது.

இந்த நிலை​யில், புதிய திருத்தந்தை தேர்​வானதை குறிக்​கும் வகை​யில் வாடிக​னின் சிஸ்​டைன் தேவால​யத்​தின் புகை போக்​கியி​லிருந்து நேற்று வெண்​புகை வெளி​யேற்​றப்​பட்​டது. மேலும், புனித பீட்​டர் தேவாலயத்தின் பெரிய மணி​கள் ஒலித்​தன.

கார்​டினல்​கள் தங்கள் மாநாட்​டின் இரண்​டாவது நாளில் கத்​தோலிக்க திருச்​சபையை வழி நடத்​து​வதற்​கான 267-வது திருத்தந்தையை தேர்வு செய்​தனர். முதல் முறை​யாக அமெரிக்​காவைச் சேர்ந்த கார்​டினல் ராபர்ட் பெர்​வோஸ்ட் என்​பவர் புதிய திருத்தந்தையாக தேர்வு செய்​யப்​பட்​டார். இவர் இனிமேல் 14-ம் லியோ என அழைக்​கப்​படு​வார்.