அனுரகுமாரவின் இந்திய சீன விஜயங்கள் குறித்து முன்னிலை சோசலிஷ கட்சி எச்சரிக்கை

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்த  ஜனாதிபதி!

ஜனாதிபதியின் இந்தியா மற்றும் சீன விஜயங்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ள புவிசார் அரசியல் முரண்பாடுகளின் முன்பாக அரசாங்கம் எடுக்கவிருக்கும்  நிலைப்பாடுகள் மிகவும் பாராதூரமானவையாகும்என முன்னிலை சோசலிஷ கட்சியின்மத்திய குழு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-

”ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2025 ஜனவரி 14 முதல் 17 ஆம் திகதி வரை சீன மக்கள் குடியரசிற்கு  அரச விஜயத்தை மேற்கொண்டதுடன்இ ஜனவரி 16 ஆம் திகதி கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டது. கூட்டறிக்கையில் ‘புதிய பட்டுப்பாதை திட்ட’ ஒத்துழைப்பை ஆதரிப்பதற்காக அதிபர் ஜி ஜின்பிங் அறிவித்த எட்டு முக்கிய நடவடிக்கைகளை பின்பற்ற இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது. ‘இரு தரப்பும் புதிய பட்டுப்பாதை  ஒத்துழைப்பு திட்டத்தில் கையெழுத்திட்டன’ என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம்  ‘கொழும்பு துறைமுக நகரம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் ஒருங்கிணைந்த அபிவிருத்தி உட்பட அனைத்து முக்கிய திட்டங்களை முன்னெடுப்பதற்கும் பட்டுப்பாதை பயிலரங்கம் போன்ற திட்டங்களை முழுமையாகப் பயன்படுத்துவதற்கும் ஒன்றாக திட்டமிடுதல் கட்டியெழுப்புதல் மற்றும் பலன்களை பெறுதல் என்ற கொள்கைகளுக்கு ஏற்ப இலங்கையில் வாழ்வாதாரத் திட்டங்களை செயற்படுத்த இலங்கை அரசாங்கம் இணங்கியதாக மேலும் கூறப்பட்டுள்ளது ஒரு பெல்ட் ஒரு சாலை ஒத்துழைப்பு என்பது பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் மட்டுமல்லஇ தென் சீனக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் சீனாவின் புவிசார் அரசியல் மூலோபாயமாகும். சீனாவுக்கு எதிராகஇ  ‘இந்தோ-பசிபிக் வியூகம்’ என்ற திட்டத்தில் அமெரிக்கா உள்ளது

இந்த அதிகாரப் போட்டி இந்தியப் பெருங்கடல் பகுதி உள்ளிட்ட ஆசியப் பிராந்தியத்தில் கடும் பதட்டத்தை உருவாக்கியுள்ளது என்பது இரகசியமல்ல. அது ஒரு பொருளாதார மற்றும் வர்த்தகப் போர் இது அரசியல் மற்றும் இராஜதந்திர நிலைப்பாட்டில் இருந்து ஒரு வெளிப்படையான இராணுவ மோதலாக வளரும் சாத்தியத்தை நிராகரிக்க முடியாது. அங்குபல்வேறு பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் மற்றும் குவாட் ராணுவ ஒத்துழைப்பு ஆகியவற்றில் சம பங்குதாரராக அமெரிக்காவின் திட்டத்தை ஒரு பிராந்திய சக்தியாக தமது அபிலாஷைகளுக்கு உட்பட்டு. இந்தியா ஆதரிக்கிறது.

டிசம்பர் 16 2024 அன்று சீனாவுடனான கூட்டறிக்கைக்கு சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு இந்தியாவுடன் வெளியிடப்பட்ட கூட்டறிக்கைஇ இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் மூலோபாயம் மற்றும் அதன் அனுசரணையை பெறும் அமெரிக்காவின் திட்டத்திற்கு தற்போதைய அரசாங்கத்தின் பக்கச் சார்ப்பை வெளிப்படுத்துவதாகும்.  இவ்விரு அறிக்கைகளையும் ஆராயும் போது இலங்கையும் சேர்ந்த இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் முக்கிய புவிசார் அரசியல் போரில் இலங்கையும் உள்வாங்கப்படுவதைக் காணமுடிகிறது.

சீனாவுடன் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இல்லாத முக்கிய உடன்படிக்கைகள் இந்த பயணத்தின் போது செய்யப்பட்டுள்ளன. அம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கு சீனாவின் சினோபெக் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது அவற்றுள் முக்கியமானது.

இது மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்து உத்தேசிக்கப்பட்ட திட்டம் என்பதுடன்இ ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியும் இதற்கு அனுமதியளித்தது. மக்கள் எதிர்ப்பின் காரணமாகவே இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க முடியாமல் போனதுஇ அப்போது மக்கள் விடுதலை முன்னணியும் இத்திட்டத்தின் முக்கிய விமர்சகராக இருந்தது. ஒருபுறம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அடிப்படையாகக் கொண்ட புவிசார் அரசியல் திட்டத்தில் இலங்கை சிக்கிக் கொண்டதுதான் இந்தத் திட்டத்திற்கான எதிர்ப்பின் அடிப்படை. மறுபுறம் தற்போதுள்ள பெற்றோலியச் சட்டத்தின்படி இலங்கை அரசாங்கத்தின் முழு ஏகபோகமாக மாறியுள்ள எண்ணெய் இறக்குமதி சுத்திகரிப்பு மற்றும் விநியோகத்தை வெளிநாட்டு நிறுவனங்களின் வசமாவதால் இலங்கையின் எரிசக்தி இறையாண்மைக்கு ஏற்படும் சிக்கல். முதலீடு என்று கூறப்பட்டாலும்இ அந்தப் பணம் இலங்கைக்கு எப்படி கிடைக்கும் என்பதில் தெளிவு இல்லாததும் மற்றொரு காரணமாக இருந்தது. அந்த காரணங்கள் எதுவும் இம்முறையும் மாறவில்லை.

அம்பாந்தோட்டை துறைமுகம் ஏற்கனவே சுமார் ஒரு நூற்றாண்டு காலத்திற்கு சீனாவிற்கு உரித்தாக்கப்பட்டுள்ளதால் அதன் அருகில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதன் மூலம் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் கப்பல் எண்ணெய் வருவாயை இலங்கை இழக்க நேரிடும்.

இலங்கைக்கான இந்திய எண்ணெய்க் குழாய்களை இயக்கும் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடர தற்போதைய அரசாங்கம் இந்தியாவுடன் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் திருகோணமலையில் மட்டுமன்றி கொழும்பு துறைமுகத்தில் கப்பல் எண்ணெய் விநியோகத்தின் வருமானத்தையும் இலங்கை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மட்டுமல்ல இலங்கையின் எரிசக்தி இறையாண்மையையும் இழக்கும் அபாயம் மற்றும் இந்தத் துறைமுகங்களுக்கு அருகாமையில்  இராணுவ வசதிகள் வழங்கப்படுவதன் ஊடாக தேசிய பாதுகாப்பு அபாயத்தையும் உருவாக்குகிறது. இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இந்தியாவின் ஆதிக்கத்தின் கீழ் வருவதைக்  காட்டுகின்றன அதே நேரத்தில் அம்பாந்தோட்டை உள்ளிட்ட தென் மாகாணம் சீன அதிகாரத்திற்கு உட்படுவதாகத் தெரிகிறது.

இந்த இரண்டு பிராந்திய சக்திகளும் கொழும்பில் ஒரு வலுவான தலையீட்டிற்கு தயாராகி வருவது ஆபத்தை மேலும் தீவிரமாக்கும். இலங்கையின் பொருளாதார இறையாண்மைக்கு மாத்திரமன்றி அரசியல் சுயாதீனம் மக்களின் பாதுகாப்பு போன்றவை ஆபத்தில் தள்ளப்படுவதுடன் வளர்ந்து வரும் இந்த அரசியல் இயக்கவியல் தொடர்பில் இலங்கையின் உழைக்கும் வர்க்கம் உட்பட முழு மக்களின் கவனத்தையும் செயலூக்க ஈடுபாட்டையும் எதிர்பார்க்கின்றோம்.

மக்கள் ஆபத்தில் உள்ளனர். ஜனாதிபதியின் இந்தியா மற்றும் சீன விஜயங்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ள புவிசார் அரசியல் முரண்பாடுகளின் முன்பாக அரசாங்கம் எடுக்கவிருக்கும்  நிலைப்பாடுகள் மிகவும் பாராதூரமானவையாகும் என நாங்கள் நம்புகிறோம்.

நீண்ட காலமாக இதே நிலைப்பாட்டில் இருந்து  வரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளிடம் இருந்து இதற்கான தீர்வை எதிர்பார்க்க முடியாது என்பது தெளிவாகிறது. எனவே இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார-அரசியல்-புவிசார் அரசியல்-இராணுவ சவால்களுக்கு மாற்று வழிகளை உருவாக்குவதிலும் அவற்றை யதார்த்தமாக்கும் திறனும் கொண்ட உழைக்கும் மக்கள் உட்பட இலங்கை மக்களிடம் ஒருங்கமைக்கப்பட்ட தலையீட்டிற்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்” என்றுள்ளது.