அநாமதேய கடிதத்தால் நல்லூர் ஆலயத்திற்கு பலத்த பாதுகாப்பு

நல்லூர் ஆலயத்தை தாக்கவுள்ளதாக அனுப்பபட்ட அனாமதேய கடிதத்தால் ஆலயத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தாள் ஒன்றில் பேனாவால் எழுதப்பட்டு, ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட மேற்படி கடிதத்தில், எனது கணவரும், இன்னும் சிலரும் சேர்ந்து எதிர்வரும் 18ஆம் திகதி நல்லூர் ஆலயத்தை தாக்கவுள்ளனர் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதுடன், ஆலயத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.