Tamil News
Home உலகச் செய்திகள் அதிக நேரம் பணிசெய்வதால் உயிரிழக்கும் அப்பாவி தொழிலாளர்கள் – எச்சரிக்கை விடுக்கும் ஆய்வு

அதிக நேரம் பணிசெய்வதால் உயிரிழக்கும் அப்பாவி தொழிலாளர்கள் – எச்சரிக்கை விடுக்கும் ஆய்வு

மிகவும் நீண்ட நேரம் வேலை செய்வதால் ஆண்டுதோறும் இலட்சக் கணக்கானவர்கள் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

2016ஆம் ஆண்டு மட்டும் 7,45,000 பேர் பக்கவாதம் மற்றும் இதய நோய் காரணமாக உயிரிழக்க நீண்ட வேலை நேரம் காரணமாக இருந்தது என்று இத்தகைய பாதிப்புகள் குறித்த முதல் சர்வதேச ஆய்வில் தெரியவந்தது.

தென்கிழக்கு ஆசியப் பிராந்தியம் மற்றும் மேற்கு பசிஃபிக் பிராந்தியம் ஆகியவற்றில் நீண்ட வேலை நேரம் காரணமாக நிகழ்ந்த இறப்புகளின் எண்ணிக்கை உலகின் பிற பகுதிகளில் உள்ள எண்ணிக்கையை விடவும் கூடுதலாக உள்ளதும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக பிபிசி தமிழ் ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

Exit mobile version