Tamil News
Home உலகச் செய்திகள் அகதிகளை குப்பைகள் என விமர்சித்த அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர்

அகதிகளை குப்பைகள் என விமர்சித்த அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர்

இந்நாடுகடத்தல் குறித்து கருத்து தெரிவித்திருந்த அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன், “இந்த குப்பைகளை அகற்றுவதன் மூலம் அவுஸ்திரேலியாவை பாதுகாப்பான இடமாக மாற்ற முடியும்,” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இவ்விவகாரம் தொடர்பாக அவுஸ்திரேலிய உள்துறையிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள அத்துறையின் பேச்சாளர், தனிப்பட்ட நபரின் விவகாரம் குறித்து துறை சார்பாக பதலளிக்க இயலாது எனக் கூறியிருக்கிறார். அதே சமயம் 18வயதுக்குட்பட்ட ஒருவரின் விசா ரத்தினைப் பல்வேறு ஆலோசனைக்கு பிறகே மேற்கொண்டதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

“அவுஸ்திரேலியாவில குற்றம் புரிந்து அதற்காக 12 மாதங்கள் அல்லது அதற்கு மேலான காலத்திற்கு சிறைத்தண்டனையை அவுஸ்திரேலியர் அல்லாதவர் ஒருவர் பெற்றிருந்தால் அந்நபர் வயது, எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது கருத்தில் கொள்ளப்படாமல் அவரது விசா இரத்து செய்யப்படும்,” என உள்துறை பேச்சாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version