மூன்று தமிழர்கள் கனடாவில் கைது

அங்கீகாரமற்ற வகையில் துப்பாக்கி வைத்திருந்த மூன்று தமிழர்கள் கனடாவில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Whitby நகரில் Durham பிராந்திய காவல்துறையினர் கடந்த செவ்வாய்க்கிழமை பின்னிரவு 11:30 மணியளவில் வாகனம் ஒன்றை நிறுத்தி மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், அங்கீகாரமற்ற வகையில் துப்பாக்கி வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் மூன்று தமிழர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதீப் பத்மநாதன் 39, சஜீத் செல்வாநாதன் 27, கஜன் அப்பாத்துரை 39 ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.