இந்திய படைகள் நிகழ்த்திய கொடூரம்;வல்வைப் படுகொலை நினைவுநாள்

இந்திய படைகளால் நடத்தப்பட்ட வல்வை படுகொலையின் 31ம் ஆண்டு நினைவேந்தல் நேற்று (02) வல்வெட்டித்துறை தீருவில் வெளியில் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வு, எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் மாலை ஏழு மணியளவில் ஈகைச் சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

1989ம் ஆண்டு இந்திய இராணுவத்தால் அப்பாவிப் பொதுமக்கள் 84 பேர் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர்.

அமைதிப்படைகள் எனற பெயரில் இந்திய கொலைவெறிப் படைகள் 6,000 த்திற்கு மேற்பட்ட அப்பாவி மக்களை கொன்றொழித்தது என்பது குருதி படிந்த கோர வரலாறு.